25 February 2017

திருச்சேறை சாரநாதப் பெருமாள் கருட சேவையில்...


 சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர்)


        இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.

   முன்பு   இத்திருத்தலம்   திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.

   

     மூலவர்    : சாரநாதப்   பெருமாள்

     தாயார்     : சாரநாயகி - பஞ்சலெட்சுமி

     தீர்த்தம்   : சார புஷ்கரிணி

 



23 February 2017

மதுரமங்கலம்..

எம்பார் ஸ்வாமிகளின் (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர்) அவதார ஸ்தலம்...மதுரமங்கலம்..



சென்னையில் இருந்து 60 km தொலைவில் உள்ளது



 மூலவர்       : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்

 தாயார்       : கமலவல்லி

புஷ்கரணி: கருட புஷ்கரணி


       இந்த க்ஷேத்ரம் எம்பார் ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம். எம்பார் சுவாமிகள் ஸ்ரீ ராமானுஜர் பிறந்து 9 ஆண்டுகள் கழித்து அவதரித்தவர்.

17 February 2017

ரதசப்தமி உற்சவம்...திருநீர்மலை


திருநீர்மலை ...

    திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. தூரத்தில் உள்ளது...இங்கு    ரதசப்தமி உற்சவம்  கடந்த 3.2.2௦17    அன்று நடைப்பெற்றது....


        நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் என  நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை.


07 February 2017

சமயபுரம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ( 6.2.2௦17)..



   திருச்சியில் பிரசித்த பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேம் நேற்று ( 6.2.2௦17) நடைபெற்றது.

  திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன்   கோவில்   600   ஆண்டுகள்   பழமையானது.   2016 ம் ஆண்டு  ஜுலை   மாதம்   மாரியம்மன்   மூலஸ்தானம்   பாலாலயம் செய்யப்பட்டு   திருப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  அருமையான அத்தகைய நிகழ்வின் சில படங்கள்...


01 February 2017

திருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2017

அப்பாவின் பார்வையில்...


( அப்பா சென்று சேவித்து ..அனுப்பிய படங்கள் )


சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் 11 பெருமாள்கள் எழுந்தருளும் தங்க கருட சேவை உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைப்பெற்றது....