26 September 2015

புவி வெப்பமயமாதல் -கட்டுரை

நம் முன் தற்போது  இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல்  "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல்.







புவி வெப்பமயமாதல் 

புவிவெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கும் .

1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10  செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள காபனீன் செறிவும் 28 சதவிதமாக   அதிகரித்துள்ளது.


 இது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விளைவு.குறிப்பிட்டு சொல்ல கூடிய வகையில் பூமியின் வெப்ப நிலை 1oC - 4oC ஆக உயரும் என்று கணக்கிடபட்டுள்ளது.உலக சராசரி வெப்பநிலை உயர்வு 2100 ஆம் ஆண்டில் 4 டிகிரி செல்சியஸ் (7.2 ° F) வரை ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.


புவி வெப்பமயமாதல் காரணம் 




நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்ளவும், நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனை கொடுக்கவும் ஏராளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன. ஒரு இயற்கை சமநிலை இருந்தது. 
ஆனால், காலம் செல்ல செல்ல காடுகளை அழித்தல், 

தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றம், 

செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல், 

பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.  இதனால்  பூமியின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது .






இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் வெப்ப கதிர்வீச்சுக்களை எந்த தடையும் இன்றி உட்செலுத்தியும், பூமி வெளியே எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால் இந்த விளைவு ஏற்படுகிறது.

இவை, பூமியில் இருந்து 15 - 60 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளதும் சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்கும் ஓசோன் படலத்தை தாக்குகின்றன.இதனால், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, தோல் புற்றுநோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் பார்க்கவும்.



பசுமை இல்ல வாயுக்கள்  அல்லது பைங்குடில் வாயுக்கள் என்பது 



மிக முக்கியமான கிரீன்ஹவுஸ் வாயு உண்மையில் நீராவி, குறிப்பிடத்தக்க அளவில் மனித குலத்தின் மூலம் நேரடியாக வெளி இடப்படும் , கார்பன் டை ஆக்சைடு (CO2) வளிமண்டல நிலைகளில் கூட சற்று அதிகரிக்கும் வெப்பநிலை கணிசமான அதிகரிப்பை  ஏற்படுத்தும்.



  •      நீராவி, 36-70%
  •       கார்பன் டை ஆக்சைடு, 9-26%
  •     மீத்தேன், 4-9%
  •     ஓசோன், 3-7%



• மேலும் இதற்கு காரணமாக உள்ள  வாயுகள்  மீத்தேன் (CH 4), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O), ஹைட்ரோஃபுளோரோ கார்பன் (HFC),பெர்ஃபுளோரோ கார்பன் (PFCs), சல்பர் ஹெக்சா ஃபுளோரைடு (எஸ்எஃப் 6)






மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதன் மூலமாக  அதிகரித்து வரும் மின் பயன்பாடு, அதன் விளைவாக எரிக்கப்படும் நிலகரி மற்றும் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் வாயுக்களாலும், மனிதர்களின் அதிகரித்து வரும் வாகன பயன்பாடுகளும், அதன் விளைவாக வெளியேற்றப்படும் வாயுக்களாலும், இயற்கையாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலமாக வெளிப்படும் மீதேன் என்னும் வாயுவினாலும், இந்த பசுமை கூடக வாயுக்கள் அதிகமாக தோன்றுகின்றன.


புவி வெப்பமயமாதலின் விளைவுகள்:

வரலாறு காணாத முறையில் அதிகரித்து வரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு ஆகியவற்றின் மூலம் தெளிவான பின் விளைவுகள் தெரிய துவங்கிவிட்டன.

பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்-


வரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது  1850 லிருந்து1550 வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள் உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத்தொடங்கி இருந்தது .1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும் விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும் பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன .1995 ஆம் ஆண்டு முதல் இந்த செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது


கடல்கள்-

புவி வெப்பமடைதலில் கடலின் பங்கைப் பற்றி கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.இந்த கடல்கள் கரியமிலவாயு கரையும் இடமாக இருக்கின்றன, இது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO 2 வை தன்னுள் இழுத்து கடல் அமிலமாக மாற வைக்கிறது. கடலின் வெட்பம் அதிகரிக்கும் போது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO 2 வை அதனால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. புவி வெப்பமடைவதால் ஏராளமான தாக்கங்கள் கடலின் மேல் ஏற்படுகின்றன.வெப்பம் அதிகமாகுதலும், பனிக்கட்டிகளும் பனித் தகடுகள் உருகுதலாலும், கடல் மேற்பரப்பு சூடாகுவதாலும், வெப்ப நிலை அதிகரிப்பதாலும் கடல் மட்டம் உயருகின்றது. இது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு தாக்கமாகும்.இந்த தாக்கத்தினால், கடல் சுற்றோட்டத்தில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது .


1961 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை, உலக கடல் வெப்பம் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை 0.10 ° சி உயர்ந்துள்ளது







தீர்வுகள்:

மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் தான் உலக வெப்பமயமாதலின் முழு காரணம் என்பது தெளிவு.

 இதற்கான முழு தீர்வுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.


பசுமை கூடக வாயுக்களை நிறுத்தினாலும், வெப்ப உயர்வு உடனே நின்று விடாது, காலத்தால் இந்த வெப்பநிலை குறைவதற்கு இன்னும் சில காலமாகும்.இப்போது உலக அளவில் இந்த வாயுக்களின் அளவை 450 முதல் 550 பிபிஎம் ஆக நிறுத்துவது (குறைப்பது) தான் முதல் தீர்வாக கொண்டுள்ளனர்.இதன் தற்போதய அளவு 380 ஆக உள்ளது.


அரசாங்கமும், பல சமூக அமைப்புக்களும் இந்த பணியில் தீவிரமாக பணி ஆற்றிவருகின்றன, இன்னும் முக்கியமான சில மாற்றங்களான, இயற்கை வேளாண்மை, சூரிய சக்தி, இயற்கை பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் நடவடிக்கைகள், இவற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தை குறைக்க முடியும்.


"புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நாம் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:


  •  தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணைக்க  வேண்டும் .

  •  குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்தலாம் .

  •  மின்கருவிகள் வாங்கும் போது பிஇஇ முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்க  வேண்டும்.



  •  குப்பையைக் குறைத்து முடிந்தவரை . கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும்.

  • போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம்.



  •  குறைப்பது (Reduce)
    மின் மற்றும் மின்னியல் சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும். இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும்.

  •  மறு பயன்பாடு (Recovery)

    மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரிசெய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும்.

  •  மீள் சுழற்சி (Recycle)

    மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிலிருந்து மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வளங்களையும் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க வேண்டும்.




எனவே நாமும் நாம் பங்களிப்பை கொடுத்து நாம் வாழும் பூமியை  காப்பது நமது கடமை ......


இப்படைப்பு 'வலைப்பதிவர் திருவிழா - 2015' மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும்
'மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015'க்காக எழுதப்பட்டது.
வகை- (2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரை - "புவி வெப்பமயமாதல்"

இது என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன்
வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்

(படங்கள் இணையத்தில் இருந்து )

அன்புடன் 
அனுபிரேம் 





25 September 2015

எள்ளு உருண்டை

எள்ளு  உருண்டை..

இணையத்தை பார்த்து கற்றது   இந்த எள்ளு உருண்டை ...





தேவையானவை 


எள்ளு    -1 க 
வெல்லம்  - 1 க 
ஏலக்காய்  -2


செய்முறை 

எள்ளை   நன்றாக வறுத்து ....பின்  பொடிக்க  வேண்டும் ....

அதனுடன்  வெல்லம்  மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து   உருண்டை பிடிக்க வேண்டும் ......








மிகவும்  எளிமையான  முறை......சுவையும் நன்றாக இருந்தது ....


பின் குறிப்பு .....

1.முதலில் எள்ளை  தீட்டனும்.. (ஊரவச்சு பின் சாக்கில் தேய்க்க அதில் உள்ள கருப்பு எல்லாம் போகும் ...) 
ஆனால் நான் கடையில் வாங்கிய எள்ளை   அப்படியே  பயன்படுத்தினேன்  ..அடுத்த முறை  தீட்டி செய்ய வேண்டும்  .....


2.எள்ளு உருண்டை செய்யும் போது அதில் பச்சரிசி  மாவை சேர்த்து  அத்தை செய்வார்கள்  ....



  • எள்ளு உருண்டை செய்யனும் ன்னு  ஆசைப்பட்டு இணையத்தில் தேடி எளியமுறை யில் எள்ளு உருண்டையும் செஞ்சாச்சு ....
  • ஆனால் பின் குறிப்பு எல்லாம் பிறகு கற்றவை ....ஆகவே மீண்டும் செய்யும் போது எள்ளை தீட்டி பச்சரிசி  மாவை சேர்த்து செய்யனும்....



அடுத்த முறை சரியான எள்ளு உருண்டை உடன் வருகிறேன் ....


அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes

10 September 2015

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில்...

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில்  செப்டம்பர் -9 ஆம் தேதி -11 கோபுரங்கள் மற்றும்  43 உபசந்நிதிகளுக்கு '' மஹா சம்ப்ரோசணம் '' - நடைபெற்றது ....



பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், மிகப் புனிதமான காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் தீவுப் பகுதியில் அமைந்துள்ளது. 



 108 வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலின் 
திருப்பணி பணிகள் மிக மிக அருமையாக இருந்தன .....ஆம் தேவை இல்லாமல் இடை  காலத்தில் எழுப்பப்பட்ட சுவர்கள்  இடிக்கப்பட்டு மிகவும் பழமையான பொலிவில்  பணிகள்  இருந்தன .....












ஸ்ரீ நம்பெருமாள்  தீர்த்தவாரி  குளமான '' சந்திரபுஸ்கரணி '' தூர்வாரப்படுகிறது...







யாக சாலை ...








ஓம் நமோ நாராயணாய நமக :
ஓம்  நமோ நாராயணாய நமக :
ஓம் நமோ  நாராயணாய நமக :



இங்கு உள்ள அனைத்து படங்களும் இணையத்தில் இருந்து கிடைத்தவை பதிவு செய்த பக்தருக்கு மிகவும் நன்றி ....


போனமுறை நாங்கள் ஸ்ரீரங்கம் சென்ற போது கும்பாபிஷேகத்திற்கு  வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது.....ஆனால் அதன் பின் அந்த திட்டம் ஏதும் இல்லை ....


 ஆனால்  எதிர்பாரத விதமாக நாங்களும், அரங்கனின் அருளால் இந்த கும்பாபிஷேகத்தை காணும் பாக்கியம் பெற்றோம் ....

அங்கு சென்ற சில மணி நேரத்தில் அனைத்து சன்னதியையும் காண இயலாவிடினும், பார்த்தவரை ஆகா கண் கொள்ள காட்சியாக  இருந்தது .....

  மீண்டும் செல்ல வேண்டும் .....

நீங்களும் அந்த மகிழ்வை பெறவே இந்த பதிவு .....


பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமர ரேறே!

ஆயர்தம் கொழுந்தே! என்னும்,

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகரு ளானே!

-தொண்டரடிப்பொடியாழ்வார்

அன்புடன் 
அனுபிரேம்


நட்பு:




07 September 2015

திருவெள்ளறை 3

திருவெள்ளறை  3


இது வரை திருவெள்ளறை ஸ்தலத்தின் வரலாறு மற்றும்  சிறப்புகளை தரிசித்தோம் ...


இப்பொழுது இங்கு பெரியாழ்வார் நந்தவனம் அமைக்கும் பணி நடை பெறுகின்றது அந்த படங்கள் உங்களுக்காக....ஆயிரத்திர்க்கும்  அதிகமான செடிகள்  நட இருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறினார்கள் ....


பொதுவாக இக்கோவிலின் வெளி பகுதி மிகவும் காடாக காட்சி அளிக்கும் ....ஆனால் இந்தமுறை மிகவும் சிறப்பாகவும் , அழகாகவும்  இருந்தது ....



கிணறு 







வெள்ளை  பாறை 


மிக  பெரிய  மதில் சுவர் 



கீர்த்தியும் ,பிரசன்னாவும் 

  நாதமுனிகளின் பிரதம சீடரான உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் ஆகியோரின் அவதாரத்தலம் இது. 

உடையவர் ஸ்ரீராமானுஜர் இங்கு சிறிது காலம் வாழ்ந்து வைணவத்தை வளர்த்திருக்கிறார். 

மணவாளமாமுனிகளும், வேதாந்த தேசிகரும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இத்தலத்தைப் பற்றி பாடியிருக்கின்றனர்.








வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை* மூவெழுகால்கொன்றதேவ*
நின்குரைகழல் தொழுவதோர்வகை* எனக்கருள்புரியே*
மன்றில்மாம்பொழில் நுழைதந்து* மல்லிகைமௌவலின் போதலர்த்தி*
தென்றல்மாமணம் கமழ்தரவரு* திருவெள்ளறை நின்றானே (5.3.1)




பரசுராமனாக, கையில் மழு ஏந்தி, பூவுகில் இருபத்தோரு தலைமுறை அரசர்களை அழித்தவனே ! மல்லிகைப் பந்தல் வழி வரும் தென்றலானது, வானுயர்ந்த சோலைகளில் நுழைந்து, தான் ஏந்தி வந்த நறுமணத்தை எங்கும் கமழச்செய்யும் திருவெள்ளறையில் கோயில் கொண்டவனே ! ஒளி மிக்க தாமரையத்த உன் திருவடிகளை என்றும் பற்றிட வழிமுறை ஒன்று எனக்கருள்வாயாக !



-திருமங்கையாழ்வார்






அன்புடன் 
அனுபிரேம் 



Image result for tamil quotes