26 October 2020

பேயாழ்வார்

 பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...



25 October 2020

பூதத்தாழ்வார்

 பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று..


ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...




24 October 2020

பொய்கையாழ்வார் ...

 இன்று  பொய்கையாழ்வார் திருநட்சித்திரம். .....


ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்   அவதரித்தவர் இவர்.....




பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே

வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே......  !

20 October 2020

கன்னிமரா தேக்கு

 வாழ்க வளமுடன் ,


இந்த பகுதியில்  மலைவாழ்மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இங்கு  நான்கு வகையான மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள். முதுவர், மலை மலசர் (malai malasar), மலைசர் (Malasar) மற்றும் காடர் போன்றோர் பல தொகுப்புகளாக வாழ்கிறார்கள். இங்கு வன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களைக் கொண்டே மலை ஏற்றத்திற்கு வழிகாட்டிகளாகவும், யானை சவாரிக்கு உதவுபவர்களாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டு வேலையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன.

17 October 2020

பெருமாள் மலை, துறையூர்

 

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.


10 October 2020

அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் , உறையூர்


வைஷ்ணவ திவ்ய தேசங்களான நூற்றி எட்டில் இரண்டாவது திவ்ய தேசம் உறையூர். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் உறையூர்.  இங்கு அர்ச்சாவதாரமாக பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் அழகிய மணவாளன் ,தாயார் கமலவல்லி நாச்சியார்.


 

08 October 2020

ருக்மணி துவாரகை , சுதாமா துவாரகை

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள் 

1. பஞ்சதுவாரகா தரிசனம் ...

2.ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

3.பேட் துவாரகை

 ருக்மணி துவாரகை 

துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது.

ஓகா துறைமுகத்துக்கு வரும் வழியிலேயே ருக்மிணி தாயாரின் தனிக் கோயிலை தரிசிக்கலாம். இங்கே ருக்மிணியும், ஸ்ரீகிருஷ்ணனும் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கிறார்கள். 

06 October 2020

பரம்பிக்குளம் அணை......

  வாழ்க வளமுடன் ,


பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து , சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன. 

மேலும் ஊர்வன, கருநாகம், கேரளா வாலாட்டி பாம்புகள், திருவாங்கூர் குக்குரி பாம்பு, திருவாங்கூர் ஓநாய் பாம்பு, கொச்சி பிரம்பு ஆமை, கல் ஆமை, இந்திய கரட்டைப் பல்லி, மேற்குத் தொடர்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் என 61 வகைகளும், மீன்கள் 47 வகைகளும், பூச்சிகள் 1049 வகைகளும், மற்றும் பட்டாம்பூச்சிகள் 124 வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமை வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


03 October 2020

அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம், திருச்சி


காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ளது.  ஸ்ரீரங்கம்  கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து,  கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.  தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.







01 October 2020

பேட் துவாரகை

   வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள் 

 பஞ்சதுவாரகா தரிசனம் ...

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில் அடுத்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் பேட் துவாரகா என்று ஒரு தலம் உள்ளது. வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள்.  அதாவது, தீவாக விளங்கும் துவாரகை.

கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!