29 February 2016

மேல்கோட்டை பயணம் 3 ...செல்ல பிள்ளை - வைரமுடி சேவை

செல்வ நாராயண சுவாமி திருக்கோவில் மூலவரை  தரிசித்தோம் ....இன்று ஊற்சவரின் பெருமைகள் ....






செல்ல பிள்ளை  ...


          சில காலம்  முன்பு  முகம்மதிய படையெடுப்பின் போது  டில்லி   சுல்தான்   கோயிலை   இடித்து விக்ரகங்களையும்,  பொன்   பொருள் எல்லாவற்றையும்   கொள்ளையடித்துச்   சென்றான் என்றும், திருநாராயணனின்   உற்சவமூர்த்தியும் சுல்தானிடம்   தான்   இருக்கிறதென்றும்   அவ்வூர் மக்கள்   மூலம்   அறிந்தார்  இராமானுஜர்  .   
                 
              
              எனவே .. இராமானுஜர்     சில சீடர்களை உடன்   அழைத்துக்   கொண்டு   டில்லி   சுல்தானை   நேரில்  கண்டு   உற்சவ   மூர்த்தியைத்   திரும்பத்   தருமாறு  கேட்டுக்   கொண்டார்.   சுல்தானுக்கு இராமானுஜரைக்    கண்டு   வியப்பும்   ஆச்சரியமும் ஏற்பட்டது.   அவரைப்   பற்றி   முன்னரே கேள்விப்பட்டிருந்தான்.   தன்   மகள்   ஆசைப்பட்டாள்   என்பதற்காக   அந்த   விக்ரகத்தை அவளுக்கு  விளையாடக்   கொடுத்திருந்தான். எனவே அதைத்   திரும்பப்   பெறுவதென்பது   அவ்வளவு எளிதல்ல.   அதனால்   ஒரு   நிபந்தனையுடன் அ தை எடுத்துச் செல்லலாம் என்றான். 

            நிபந்தனை   இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை   அழைக்க   வேண்டும்   விக்ரகம் தானாகவே   அவரிடம்   வந்து   சேரவேண்டும் என்றான். 
           உடனே    இராமானுஜர்    ஒரு     குழந்தையை அழைப்பதுபோல்      '' என் செல்லப் பிள்ளாய் வருக ''   என்று குழைவாக அழைத்தார். 

         ஆச்சரியம் ............!   

                      சிலைவடிவில் இருந்த இராமப்பிரியன்   விக்ரகம்    ஒரு   குழந்தை வடிவில்  மாறி   சலங்கை  சல்  சல்  என்று  ஒலிக்க   அனைவரும்   வியந்து நோக்க   நடந்து   வந்து   அவர்    மடியில்   அமர்ந்து கொண்டு   மீண்டும்   சிலையாயிற்று.  


               சுல்தான்       மலைத்துப்     போனான். நிபந்தனைப்படியே     உற்சவ      மூர்த்தியை எடுத்துப்போக     அனுமதித்து    அத்துடன்   பொன்னும் பொருளும்    தந்து   அனுப்பி   வைத்தான்.   எனவே     மேல்கோட்டை        உற்சவமூர்த்தி    'செல்லப்பிள்ளை'   என்றும் "யதிராஜ சம்பத்குமாரன்"    என்றும் அழைக்கப்படுகின்றார்.  

              செல்வப்பிள்ளை   திருநாராயணபுரம்  வந்த நாளான  மாசி   கேட்டை "டில்லி உத்சவம்" என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.


             சுல்தானின்     மகள்   சிலையைப்   பிரிந்திருக்க   முடியாமல்   மேல்கோட்டையைத் தேடி   ஓடி    வந்து     உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக்   கொண்டாள்.    அடுத்த    நிமிடம்   அந்த சிலையுடன்    ஐக்கியமாகி   விட்டாள். அவள் அன்பைப்     பாராட்டி   அவளைப்   போலவே   ஒரு சிலை  செய்த    'பீபீ நாச்சியார்'         என்ற பெயரில் நாராயணனுக்கருகில்   அமர்த்தி விட்டார் இராமானுஜர்.









         டில்லி       சுல்தானிடமிருந்து       சிலையைக் கொண்டு     வரும்      வழியில்      வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்    அவரை          எதிர்த்து சிலையையும்,  சுல்தான்   கொடுத்த   பொன் பொருள்    ஆகியவற்றையும்   கவர்ந்து   கொள்ள முயன்ற   போது   ...உடன்   வந்தவர்கள்   அலற, இராமானுஜர்  '' அவனைக்   காப்பாற்றிக்   கொள்ள அவனுக்குத்   தெரியும் '' என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.     அருகிலிருந்த   சேரிமக்கள் இவர்கள்  அலறல்   கேட்டு   திரளாக   ஓடிவந்து கொள்ளைக்காரர்களை   விரட்டி, இராமானுஜரையும்   மற்றவர்களையும்  ஊரின் எல்லை   வரைக்கும்   கொண்டு   வந்து   சேர்த்தனர். 

                 அவர்கள்  கோயிலுக்குள்   நுழைய   தங்களுக்கு அனுமதியில்லை என்று   சொல்லி   விடை பெற்றுக்கொள்ள   முயன்ற   போது,   இராமானுஜர் இறைவனைக்   காப்பாற்றிய   அவர்களுக்குத்தான்  உண்மையிலேயே   அதிக   உரிமை   உண்டு   என்று சொல்லி   அவர்களையும்   கோயிலுக்குள் அழைத்துச்   சென்றார். 

                 ஆயிரம்   ஆண்டுகளுக்கு  முன்னரே   சேரி மக்கள்   என்று   தாழ்த்தப்பட்ட   நிலையில்   ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை   ஆலயப்   பிரவேசம் செய்து   இராமானுர்   அக்காலத்திலேயே   ஒரு புரட்சியை   செய்துள்ளார்.


'வைரமுடி கருட சேவை'


        மேல்கோட்டை நாராயணபுரத்தில்   பங்குனி மாதத்தில்   நடைபெறும்   கருடன்   கொண்டு வந்த 'வைரமுடி சேவை'   விழா   தனிச்சிறப்புடையது. இராமானுஜர்   சந்நிதிக்கு  முன்னாள்   உற்சவ மூர்த்தியை    நாச்சியாருடன்   எழுந்தருளச்   செய்து வைரமுடி   அணிவித்து  விழா கொண்டாடுகின்றனர். 




           இராமன்   முடிசூட்டு  விழாவைக்   காண தசரதருக்குக்   கிடைக்காத   பேறு   இராமானுஜருக்கு   கிடைத்தது. வைர முடி சேவை பங்குனி  மாதம்   புஷ்ய நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது.   பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.



               முதலில்    கருடாழ்வார்   கோயிலைச்    சுற்றி   வலம்   வருகின்றார்.  பிறகு வைரமுடி   என்று   அழைக்கப்படும்   கிரீடம்  பல்லக்கில்   ஏற்றப்பட்டு கோயிலைச்  சுற்றி  வருகின்றது. இந்த வைரமுடி என்ற வைரம்   பதிக்கப்பட்ட   கிரீடத்தை        மாண்டயா      கஜானாவிலிருந்து   சகல    மரியாதையுடன்   கலெக்டர்   கொண்டு  வருவார்.       வருடத்துக்கு     ஒரு   முறை  மட்டுமே இந்த   கிரீடம்   பெருமாளுக்கு   அணிவிக்கப்படுகிறது.

            கருடன்   கொண்டு   வந்த  அற்புத   வைரமுடியை  அணிந்து கொண்டு   பல்லக்கில்   வெளியே  வருகிறார்   சம்பத  குமாரர்.   தாயார்களுடன் பெருமாள்   கருட   சேவை   சாதிப்பது   இங்கு   ஒரு   தனி சிறப்பு.


           எல்லாத்  திசைகளிலும்   பெருமாளை   அழைத்து    செல்லுகிறார்கள்.  விடியற்காலை கிட்டதட்ட 2 மணிக்கு திரும்பவும் பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்துக்குச் செல்கிறார் அங்கே வைரமுடி கழட்டப்பட்டு ... பிறகு ராஜ முடி அணிந்து  சேவை   சாதிக்கின்றார்   செல்லப்பிள்ளை.












இராஜமுடி (கிருஷ்ணராஜ முடி) சேவை

       மைசூர் அரச        பரம்பரையில்   வந்த   மன்னர்களில்   கிருஷ்ணராஜ  உடையார்   வைரமுடியைப்   போலவே    மற்றொரு   கிரீடத்தை  அளித்தார். இதை கிருஷ்ணராஜ முடி என்றும்   அழைக்கிறார்கள் .       ராஜ முடி     அணிந்துக்கொண்டு   நிஜமாகவே அவர் இளவரசன்    போல  நடந்து   செல்கிறார்    டெல்லியிலிருந்து       இராமானுர் கூப்பிடக்குரலுக்காக    ஒடி   வந்த   இராமப்பிரியர்.

         நம்மாழ்வார் சொன்ன "கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்" என்றபடி இளமையிலேயே வைர முடி, ராஜமுடி நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.



வருகிற மார்ச் மாதம் 19 ம் தேதி இங்கு வைர முடி  கருட சேவை நடை பெறள்ளது ...


   (அனைத்து படங்களும் இணையத்தில் கிடைத்தவை ....பகிர்ந்த பக்தர்களுக்கு மிகவும் நன்றி )                        



         எண்பெருக் கந்நலத்து - ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன் - திண்கழல் சேரே.



- நம்மாழ்வார்

அன்புடன்

அனுபிரேம் 

25 February 2016

மேல்கோட்டை பயணம் 2- செல்லுவ நாராயண சுவாமி திருக்கோவில்



செல்லுவ நாராயண சுவாமி திருக்கோவில் ...


             கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான்.   அதனால் ஸ்ரீரங்கத்தில்    ராமானுஜருக்கு       பல தொல்லைகள்    கொடுத்தான்.    இதனால்  கூரத்தாழ்வாரின்   ஆலோசனைப்படி     ராமானுஜர்    வெள்ளை    சாத்தி, தமிழ்நாட்டை விட்டு     கர்நாடக   தேசத்துக்கு      சத்தியமங்கலம்  வழியாக         தொண்டனூர்    வந்தார். 

என போன பதிவில் வாசித்தோம்...


வரலாறு          
            மேல்கோட்டையிலிருந்து  20 கிமீ தூரத்தில் இருக்கும்     தொண்டனூரில் ராமானுஜர் வசித்து வந்த போது  அவரது   நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட,   அன்று  இரவு   அவர்   கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும்  வழியைச்  சொல்லி  அங்கு   ஒரு   புற்றில் இருக்கிறேன்   என்றும்   தன்னை  வெளியே கொண்டு வரவேண்டும்  என்று கூறினார்.                 

             ராமானுஜர்   பெருமாள்   சொன்ன   வழியாக      திருநாராயணபுரத்துக்கு   வந்து    அங்கு வேதபுஷ்கரணியில்    குளித்துவிட்டு   திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி  குளத்துக்கு பக்கத்தில்   இருந்த  எறும்புப்    புற்றை,   ஊர்   மக்கள் உதவியுடன்   பால், மற்றும்   தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர்   திவ்ய மங்கள விக்ரஹத்தை   ராமானுஜர்   பிரதிஷ்டை   செய்தார். 


           ராமானுஜருக்கு   இங்கே திருமண்  கிடைத்தால்  இன்றும்   மேல்கோட்டையில் திருமண்   விஷேசமாக விற்கப்படுகிறது.




இணையத்தில் இருந்து 

இணையத்தில் இருந்து

இணையத்தில் இருந்து

இணையத்தில் இருந்து


மூலவர்: -        திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

உத்ஸவர்: - ஸம்பத்குமாரர்.

இதரபெயர்கள் - ராம ப்ரியர், செல்ல  பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார்: - யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம்: - கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம்: - ஆனந்தமய விமானம்

ப்ரத்யக்ஷம்: - கருட பகவான்



நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ்நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம்.

முகப்பு 





















   ராமானுஜர் தை புனர்பூச நாளில் கல்யாணி புஷ்கரணிக்கரையில் அமைந்த  புதரினுள் ஒளிர்ந்த பெருமானைக்   கண்டெடுத்துப்   பிரதிஷ்டை செய்த அந்த நன்னாள்   இன்றும் தை மாதம் விமரிசையாகத் திருநாராயணபுரத்தில் கொண்டாடப்படுகிறது.

தேர் 


மிக அழகான திருக்கோவில்....மூலவரும் ரொம்ப அழகு ....



நாங்கள் காலை 5 மணிக்கு பெங்களுரிலிருந்து கிளம்பி   இத்திருகோவிலை காலை 8  மணிக்கு அடைந்தோம் . ஆனால் கோவில் திறப்பு காலை 9 .30  மணிக்கு என்று கூறவே  நாங்கள் எடுத்து சென்றிருந்த   காலை உணவை சாப்பிட்டு காத்திருந்தோம் .பின்  நடை திறக்கவே எங்களுக்கு  மிகவும் சிறப்பான தரிசனம் கிடைத்தது . ....


ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ.


- நம்மாழ்வார் 


தொடரும் ....

அன்புடன்

அனுபிரேம்

இப்பதிவின்  தொடர்ச்சிகளின் இணைப்பு ...




 3.செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...

 4.சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


 5.மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..




22 February 2016

மேல்கோட்டை பயணம் 1

அனைவருக்கும் வணக்கம் ....


கடந்த வாரம் நாங்கள் ஒரு நாள் பயணமாக கர்நாடகா ..மாண்டியாவில் உள்ள மேல்கோட்டை ஸ்தலத்திற்கு சென்று வந்தோம் .....அந்த பயணத்தை பற்றியும் ...மிகவும் சிறப்பான மேல்கோட்டை ஸ்தலத்தை பற்றியும் ...தகவல்களுடன்  தரிசிக்கலாம் வாருங்கள் ...

இத்தலம் தென் இந்தியாவில் கர்நாடகா மாநிலம்  , மாண்டியா மாவட்டத்தில் , பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ ரும் , மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும்  உள்ளது.

பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்து.



செல்லும் வழி 














திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம்.



சுவாமி  இராமானுஜர்


            கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். 

            அதனால் ஸ்ரீரங்கத்தில்    ராமானுஜருக்கு       பல தொல்லைகள்    கொடுத்தான்.    இதனால்  கூரத்தாழ்வாரின்   ஆலோசனைப்படி     ராமானுஜர்    வெள்ளை    சாத்தி, தமிழ்நாட்டை விட்டு     கர்நாடக   தேசத்துக்கு      சத்தியமங்கலம்  வழியாக         தொண்டனூர்    வந்தார். 


            அப்போது   ஜைன   மதத்தை      ஆதரித்து        வந்த   பிட்டிதேவன்    என்ற     மன்னன்      இந்த    இடத்தை   ஆண்டு   வந்தார் . அவரது   மகளுக்கு சித்தபிரம்மை       பிடித்திருந்தது.  அதனை    நீக்க ஜைனத்    துறவிகளால்   முடியாமல்     போக, ராமானுஜர்     உதவியால்  அது      நீங்கியது. இதைக் கண்ட   பிட்டிதேவன்     ஜைன   மதத்தைத்   துறந்து,        ஸ்ரீவைஷ்ணவன்    ஆனார் .  ஸ்ரீ ராமானுஜர்           அவருக்கு     விஷ்ணுவர்தனன்    என்ற    பெயரைச்    சூட்டினார்.  இந்த   மன்னன்    மேல்கோட்டை  கோயிலுக்குப்   பல   உதவிகள்    செய்துள்ளார் . 

             பின் சுவாமி ராமானுஜரின்  வழிகாட்டலில்  சுவாமி முதலியாண்டான்  அவர்கள் பஞ்ச நாராயண ஸ்தலத்தை நிறுவினார் . அதற்கு தேவையான அனைத்து  உதவியையும் விஷ்ணுவர்தன் அளித்தார் . 

அந்த பஞ்ச நாராயண ஸ்தலங்கள் ....



 ஸ்ரீ கீர்த்தி நாராயணா  திருக்கோவில் ,தலக்காடு

ஸ்ரீ நம்பி  நாராயண திருக்கோவில் , தொண்டனுர் 

ஸ்ரீ கேசவ நாராயணா திருக்கோயில் (சென்ன கேசவ ), பேலூர்

ஸ்ரீ சௌம்யா  நாராயண திருக்கோவில் , நாகமங்கலா  

ஸ்ரீ வீர நாராயண திருக்கோயில்,  சாளக்கிராமம் 


 



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி    ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு (1)




இப்பதிவின்  தொடர்ச்சிகளின் இணைப்பு ...



 2 .திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 

 3.செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


 4.சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


 5.மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..



தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்

11 February 2016

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 3 கிருஷ்ணரும் ராதையும்


அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள் ....

மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ... இன்றைய ஓவியத்தில் கிருஷ்ணரும் ,ராதையும் .. எனது முந்தைய பதிவில்  நீங்கள் ரசித்த  விநாயகர் இங்கே ....கிருஷ்ணர் இங்கே ...







அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes


04 February 2016

தினை அடை

  அனைவருக்கும் வணக்கம் ...

தினை அடை செய்வதற்கு முன் தினையை  பற்றி .....

கி.மு. 2700 களிலேயே  சீனாவிலும்  பின்னர் சுவிட்சர்லாந்து   போன்ற   நாடுகளுக்கும் பரவியதாகவும்,    பின்னர்   இந்தியா,   ஜப்பான்,   தென் அமெரிக்கா,   வட அமெரிக்கா   போன்ற இடங்களில்   பயிரிடப்படுகின்றன.  இந்தியாவில் மட்டும்   ஆந்திரா,  குஜராத்,  தமிழ்நாடு, மகாராஷ்டிரா   மற்றும்   மைசூர்   போன்ற இடங்களில்  தினை  உணவு  தானியமாக பயிரிடப்படுகிறது.


அமெரிக்கா, மத்திய  ஐரோப்பாவில்  தீவனப் பயிராகவும்,  வளர்க்கின்றனர்.   இது  வறட்சியை  தாங்கும்  பயிர்.  இதனை  ஆண்டு  முழுவதும் பயிரிடலாம் ....



தினையின் பயன்கள்......

சிறு  தானிய  வகைகளுள்   தினையும் ஒன்று. இனிப்புச்  சுவை  கொண்டது.


உடலை  வலுவாக்கும்,  சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு.  இதற்கு  மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.


 பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.


100 கிராம் தினையில் உள்ள சத்துக்கள்


கலோரி - 331
நீர்ச்சத்து - 11.2 கிராம்
புரதச் சத்து - 12.3 கிராம்
கொழுப்புச் சத்து - 4.3 கிராம்
தாது - 3.3 கிராம்
நார்ச்சத்து - 8 கிராம்
கார்போஹைட்ரேட் - 60.9 கிராம்
பாஸ்பரஸ் - 290 மிகி
இரும்பு - 12.9 மிகி
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%

புரதம் ...


தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.

இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.


சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.


கொழுப்புச் சத்து....


தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.



கனிமச் சத்துக்கள்...

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை, கோதுமை, ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.



தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.


உடல் பலம் பெற....

நம் முன்னோர்கள் உணவுகளான கேழ்வரகு, கம்பு, வரகு, திணை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் மிகுந்த திடமாக இருந்தது. தினையில் உடலுக்கு தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதனால் திணை அரசியை சாதமாகவோ அல்லது லேசாக வறுத்து அரைத்து மாவாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல திடகாத்திரமான உடலை பெறலாம்.


வாதம் குறைய..


வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் நிலையம் அதனதன் நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியமாகும். இதன் நிலையில் எது மிகுந்தாலும் உடல் பாதிக்கப்படும். உடலில் வாதம் மிகுவதை போக்க திணை மாவு சிறந்த உணவாகும். இது வாயுவைப் போக்கி தச வாயுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் குணம் கொண்டது.

(செய்திகள்  அனைத்தும் இணையத்தில் இருந்து ....)

வாங்க தினை  அடை சாப்பிட போகலாம் ....


தேவையானவை .....

தினை அரிசி     - 2 ட 
க .பருப்பு             -1/2 ட 
து பருப்பு             -1/2 ட 
வர மிளகாய்     -  8
சோம்பு                --சிறிது 
பூண்டு                - 4 பல் 
உப்பு                    -  தே. அளவு 


செய்முறை ...

மேலே உள்ள பொருட்களை 3 மணி நேரம் ஊரவைத்து ....பின் அரைக்க வேண்டும் .... அந்த மாவை உப்பு சேர்த்து  மெலிதாக ஊற்றி எடுத்தால் ...தினை அடை தயார் ...


திணை 






அன்புடன்

அனுபிரேம்