20 March 2016

சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் -மேல்கோட்டை பயணம் 7


அனைவருக்கும் வணக்கம் ...

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...


திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 


செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..



ஏற்கனேவே கூறியது போல்   நாம் இப்பொழுது  மற்றுமொரு யோக நரசிம்மர் ஆலயத்தை பார்க்கலாம் .. ...  











இங்கும் மூலவர் சுவாமி யோக நரசிம்மர் ..
       ஆனால் இக்கோவிலின்  சிறப்பு சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்...

         மிக சிறிய கோவில்..ஆனாலும் மிக
பெரிய கீர்த்தி ..ஆம் இங்கு உள்ள சுவாமி  இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது ...

        முந்தைய பதிவில் நாம் பிட்டி தேவன்  என்ற மன்னனின்  மகள் சுவாமி இராமானுஜரின்      உதவியால் சித்தபிரம்மையில்    இருந்து விடுதலை ஆனார்  அதன் காரணமாக பிட்டி தேவன்  ஜெயின்   மதத்தைத்   துறந்து,        ஸ்ரீவைஷ்ணவன் ஆனார் என பார்த்தோம் ...

பிறகு ........


            அரச ஆதரவு இழந்த ஜெயின் அறிஞர்கள் இராமானுஜர்  மேல் கோபம் கொண்டு..ஒரு சமய  தத்துவ விவாதத்திற்கு  சவால் விடுத்தனர். ..அவர்களின் சவாலை சுவாமி இராமானுஜர்  ஏற்றுக்கொண்டார். 

           


       ஆனால் ஆயிரம் ஜெயின் அறிஞர்கள் இந்த விவாதத்திற்கு கூடியிருந்தனர் .

 எனவே சுவாமி ராமானுஜர்  , "நான் உங்களின்  சவால்களை ஏற்கிறேன் ஆனால் , நான் இந்த திரைக்குப் பின்னால் அமர்ந்தே  பதிலளிக்க இயலும் ",
  என்று  கூறினார். அவர்கள் தங்களுக்குள்ளே பேசி இந்த ஒரு பிராமணர் திரைக்குப் பின்னால் என்ன செய்ய முடியும்". .. நாம் ஆயிரம் பேர் என கூறி ..

சுவாமி இராமானுஜர் திரைக்குப் பின்னால் அமர்ந்து பதில் அளிக்க ஒத்துக்கொண்டனர் ...

ஆயிரம் சமணர்கள்  ஒரே  நேரத்தில் சுவாமி ராமானுஜரிடம்  ஆயிரம் கேள்விகளை வீசினர்.... சுவாமி ராமானுஜர் ஒரே  நேரத்தில்  ஆயிரம் கேள்விகளுக்கும்  பதிலளித்தார்...



இணையத்திலிருந்து 




   மேலும் , பதில்களை கேட்டவர்களுக்கு , உரத்த இரைப்பு சத்தம் கேட்டது... திரை அகற்றப்பட  ஆயிரம்  தலையுடன் சுவாமி இரமானுஜர் ஆதிசேஷ அவதாரத்தில் இருந்தார் ... . சமணர்கள் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டு அவசரமாய் கலைத்தனர்.



இணையத்திலிருந்து 

இதன் காரணமாக இந்த யோக நரசிம்மர் ஆலயத்தில் சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதார சன்னதி நிறுவப்பட்டுள்ளது.



இணையத்திலிருந்து 


கோவிலின் வெளிப்புறம் ....










 மேலும் இங்கு சுவாமி ராமானுஜர்  உபயோகப் படுத்திய கூடை இன்றும்   ஒரு சிறிய கண்ணாடி பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.




இணையத்திலிருந்து 



வேணுகோபால சுவாமி கோவில் பட்டரே இங்கும் என்பதால் ..நாம் காத்திருக்க வேண்டும் ...

காத்திருந்தாலும் கிடைத்த தரிசனம் மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது ...


சுற்றிலும் உள்ள பெரிய பாறைகள் ...









உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.


  - நம்மாழ்வார்
முதல் திருமொழி
(2899)




தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 





3 comments:

  1. சிறப்பான ஓர் கோவில் பற்றிய தகவல்கள் அறிந்தேன். புகைப்படங்களும் நன்று.

    ReplyDelete
  2. அருமை சகோதரியாரே
    தொடர்கிறேன்

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள் சகோ.

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete