29 June 2026

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள் -- ஆனி மூலம்

                                            



                                                   "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,

தீபக்த்யாதி குணார்ணவம்,

யதீந்திர ப்ரவணம்,

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--

தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று  (29/6/2026)

 ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான, 

ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில்  எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!

28 June 2026

ஸ்ரீரங்கம், பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம்

 ஸ்ரீரங்கம்,பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம் - இன்று (28/06/2026)




அரங்கருக்கு வருடாவருடம் ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை) நட்சத்திரத்தன்று , விசேஷமாக திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.

 ."ஜேஷ்டா" என்ற ஸம்ஸ்க்ருத சொல் 'பெரிய' என்ற பொருள் உரைக்கும். ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் (கேட்டை ) என்றால், 'பெரிய நட்சத்திரம்'என்றும் பொருள் கொள்ளலாம்.

30 May 2026

வைகாசி விசாகம் -- கந்தன்

  


ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

*ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!*  இன்று (30.05.2026) வைகாசி, விசாகம்* 

ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில்,

இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று. இவர் அவதரித்து 5126 வருடங்கள் ஆகின்றன.


பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்) நம்மாழ்வார்

21 April 2026

1.ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி எம்பெருமானார் திவ்யலங்கார திவ்யசேவை

 ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் ஸ்வாமி எம்பெருமானார் சித்திரைத்திங்கள் திருஅவதார திருநக்ஷத்திர மஹோற்சவ  திவ்யலங்கார திவ்யசேவை...




20 April 2026

ஸ்ரீ எங்கள் ஆழ்வான்- சித்திரையில் ரோகிணி

 இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.

ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.

திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.




19 April 2026

ஸ்ரீ உய்யக்கொண்டார் - சித்திரையில் கார்த்திகை

 இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)







18 April 2026

14 April 2026

பராபவ ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு -வாழ்த்துகள் !!

                       பராபவ ஆண்டு தமிழ்ப்  புத்தாண்டு -வாழ்த்துகள் !!


நம்பெருமாள் சித்திரை முதல் நாள் ஆஸ்தான மண்டப சேவை




03 April 2026

திருவரங்கத்து அமுதனார் --- பங்குனி ஹஸ்தம்.

அண்ணல் இராமானுசரை, அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம்  -  நேற்று  (02/04/2026)--பங்குனி ஹஸ்தம்.




திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !


"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !

எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !

நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !

நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !

பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !

பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !

அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !

அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"

01 April 2026

பிரணய கலகம்! --- மட்டையடி உற்சவம்

 இன்று  பங்குனி உத்திரம்-நம்பெருமாள், பெரிய பிராட்டியார்  சேர்த்தி உற்சவம்: பிரணய கலகம் !



31 March 2026

ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!

 ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!


எட்டாம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,(கண்ணாடி அறை) பல வீதிகள் வழியாக 16 மண்டபங்களில்/இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி  5 கி.மீ.தொலைவிலுள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு 9 கி.மீ சுற்றி பகல் 01.15க்கு எழுந்தருளினார்.

செல்லும் வழியில் இரண்டு தீர்த்தங்களில் --அஸ்வ தீர்த்தம்,பிலவ தீர்த்தம்--திருவடி(சடாரி) விளக்கினார்.

(இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்து, தூய்மைப் படுத்தும் கைங்கர்யத்தை கோவையைச் சேர்ந்த அடியார் ஸ்ரீ ஜெகதீச ராமாநுஜ தாச  அற்புதமாகச் செய்துள்ளார்;அவருக்குப் பல்லாண்டு பாடுவோம்) 

எல்லைக்கரை மண்டபத்தில் திருவாரதனை,அலங்கார அமுது கண்டருள்கிறார். மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு,மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்து கிழக்குச் சித்திரை வீதியில் (கோரதம் அருகில்) இரவு 8 மணிக்கு வையாளி கண்டருள்கிறார். இரவு 9.மணிக்கு ஆஸ்தானம் வந்தடைகிறார்.




மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணர் வைரமுடி சேவை 2026

 மேல்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வநாராயண பெருமாள் திருக்கோயில் - வைரமுடி உத்ஸவம் - திவ்ய ஸேவை

பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் 'வைரமுடிச் சேவை' விழாவில், இராமானுசர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர். 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, திருமலை பிரம்மோற்சவம், காஞ்சிபுரம் கருடசேவை போல வைணவார்களால் பெரிதும் போற்றப்படும் மிகப்பெரிய திருவிழா "மேல்கோட்டை வைரமுடி சேவை" யாகும்.


நேற்று நடைப்பெற்ற வைரமுடி சேவையின் காட்சிகள் இன்று ...



30 March 2026

ஸ்ரீநம்பெருமாள் - கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை 2026

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்-- பங்குனி திருநாள் (ஆதி பிரம்மோற்சவம்) 6-ம் திருநாள்  

ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நேற்று -

நம்பெருமாள் உறையூர் புறப்பாடு



27 March 2026

16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்...





ஸ்ரீ ராம நவமி

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.

இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.




26 March 2026

108 வரிகளில் இராமாயணம் ...


வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணத்தின்  ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில்...



25 March 2026

எளிய வரிகளில் இராமாயணம்

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார  நாள்.  இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.  







14 March 2026

தொட்டையாசார்யர் - மாசி உத்திராடம்

சோழசிம்மபுரம் (திருக்கடிகை ) ஸ்வாமி தொட்டையாசார்யர் வருஷ திருநக்ஷத்திரம்  இன்று மாசி உத்திராடம் ( 14-03-2026 ) 



12 March 2026

திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !! - மாசிக் கேட்டை

 திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !!

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மாசிக் கேட்டை திருநாளன்று தான், திருநாராயணபுரம் செல்வ(ல)ப்பிள்ளை --ஸ்ரீராமப் பிரியன் டில்லியிலிருந்து, திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்.



26 February 2026

திருக்கச்சி நம்பிகள் - மாசி மிருகசீரிஷம்

 மாசி மிருகசீரிஷம் திருக்கச்சி நம்பிகள் அவதார நக்ஷத்திரம் திருநாள் இன்று 




06 February 2026

கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரம் -- தை ஹஸ்தம்

ஸௌம்ய ஆண்டு (கி.பி. 1009) தை மாதம் - ஹஸ்த நட்சத்திரத்தில் 

கூரம் என்னும் ஊரில் திருமாலின்  ஸ்ரீ வஸ்தம் என்னும் திருமறுவின்

 அவதாரமாக  ஸ்ரீ வத்ஸாங்கமித்ரர், திருமறுமார்பன் என்ற திருநாமத்தோடு 

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி  அவதரித்த தினம் இன்று. 

ஜகதாச்சார்யார் பகவத் ராமாநுஜர் இவரை "பவித்ரமாக" பாவிப்பார்.