ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்
2. இரண்டாம் திருநாள்
மூலவர் - கேசி வதம்,
உற்சவர் -கண்ணன் கவர்ந்த கூறைகளை ஆண்டாள் இரத்தல்,
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
12. மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
இரண்டாம் பாசுரம். “என்ன இருந்தாலும் இப்படி அவனிடம் தேடிப்போவது அவனுக்குக் கெட்ட பெயரை விளைக்கும்; அதை நீ செய்யலாமா? உன்னுடைய ஸ்த்ரீத்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?” என்று கேட்க, அதற்கு பதிலளிக்கிறாள்.
நாணி இனியோர் கருமம் இல்லை,
நாலயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டு பண்டாக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்
இனிமேல் வெட்கப்பட்டு ஒரு பயனுமில்லை. ஊரிலுள்ளவர்கள் என் விஷயத்தை அறிந்துகொண்டார்கள். காலம் தாழ்த்தாமல், வேண்டும் பரிஹாரங்களைச் செய்து, இப்போது பிரிந்து துன்புறும் நிலைக்கு முன்பிருந்த எம்பெருமானுடன் கூடியிருந்த நிலைக்கும் முன்பிருந்த அறிவற்ற நிலையில் என்னை ஆக்க நினைத்தீர்கள் என்றால், நீங்கள் என்னை ஸத்யமாகக் காப்பாற்ற விரும்புகிறீர்களாகில் என்னை திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கள்.
அங்கே வாமனரூபியாய்ச் சென்று உலகங்களை எல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால் இந்த நோய் தீரும்.
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment