23 September 2023

ஸ்ரீ திருநாராயணபுரம்

ஸ்ரீ  திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டை ....

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா வட்டத்தில் மேலுகோட் (மேல்கோட்டை) காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். 

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலைக் கிராமம். இந்த இடம் திருநாராயணபுரம், யாதவகிரி அல்லது யதுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. 

மேல்கோட்டையில், ஶ்ரீ செல்வநாராயணர் கோயில் மலையடிவாரத்திலும், ஶ்ரீ யோகநரசிம்மர் கோயில் மலை உச்சியிலும்   அமைந்துள்ளது.




18 September 2023

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்.