நாங்க பஞ்ச பாண்டவ ரதங்களை கண்டு வெளியே வரும் போது ....மழை ....அப்பொழுது ரதங்களை கரு மேகம் சூழ ஆகா ...அருமையான காட்சி ....
அடுத்ததாக ... அங்கிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகத்திற்கு ( sea shell museum ) நாங்கள் சென்றோம்...
அங்கு கிளிஞ்சல்கள் அவற்றின் அளவுகள் , தோற்றம், வண்ணங்களின் படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது... ,
நத்தைகள் மற்றும் சிப்பிகள் என 40000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களின் தொகுப்பாக மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
இங்கு இரண்டு இடங்கள் உண்டு ....அவை
கடல் ஷெல் அருங்காட்சியகம் மற்றும் மீன் கண்காட்சி( aquarium)..
சிப்பிகளால் ஆன கப்பல் , ரெயில் ,விமானம் என ....ஆகா ...என்ன ஒரு அழகு ....
இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் கடல் உணவு உணவகமும், கைவினை பொருட்கள் விற்பனை நிலையமும் உள்ளது .....
ஆனால் ஒவ்வொரு இடத்திர்க்கும் தனி தனி நுழைவு கட்டணம் ... .........
கலை நயத்துடன் கூடிய ....தனியார் அருங்காட்சியகம்..கண்டு மகிழ வேண்டிய ஒரு அருமையான இடம் ....
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்