காலை வணக்கம் ....
எனக்கும் செடி வளர்க்க வேண்டும் என்று பல நாள் .......வருட கனவு
8 வருசத்துக்கு முன் வாங்கின தொட்டி இது....நானும் பலமுறை பலவிதமாக முயற்சி செய்தும்.............ஒண்ணும் வளறல....
கடைசியா ஏப்ரல் மாதம் வந்த அம்மா....சும்மா ஒரு தக்காளிய நசிக்கி போட்டாங்க...
10 நாள்ல வளர ஆரம்பித்து விட்டது...
ஆன எனக்கு கவலையும் ஆரம்பித்து விட்டது.....ஆமா நான் ஒரு மாசத்துக்கு ஊருக்கு போறேனு...
ஆன அவர்கிட்ட மட்டும் தண்ணி ஊத்த சொல்லிட்டு கிளம்பியாச்சு...
ஒரு மாசத்திற்கு பிறகு...........
ஆச்சரியம்....எல்லாரும் நல்லா வளர்ந்திதாங்க.....
தொட்டிக்குள்ள மண்ணு மட்டுமில்ல பிரட் எல்லாம் இருந்தது....
நல்லா செடிய வளர்திருக்கிங்கன அவருக்கும் ஒரு பாராட்டை கொடுத்தாச்சு.....
அவங்க எப்போ காய் காய்ப்பாங்கனு எல்லாம் எனக்கு தெரியாது ஆன மனசுக்கு ரொம்ப சந்தோசம்....அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கதான் இந்த பதிவு...........
தினமும் அந்த இலைய தொட்டு வாசம் பிடிப்பது..........அப்பப்பா...ஆனந்தம்
எங்க செடியில் காய்த்த தக்காளி உங்கள் பார்வைக்கு...
என்றும் அன்புடன்
அனுபிரேம்