31 December 2023

15.எல்லே! இளங்கிளியே!

 15.எல்லே இளங்கிளியே...

இளமை தங்கிய கிளிபோல் இருப்பவளே! எழுந்திராய். வாய்ப்பேச்சில் நீ சமர்த்தையாய் இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிவோம். தோழிகள் அனைவரும் வந்தனரா, வந்தனர், ஆச்சரியமான செய்கைகளை உடையவனான கண்ணனை பாடுவதற்காக எழுந்திராய்.



30 December 2023

14.உங்கள் புழைக்கடை

   14. உங்கள் புழைக்கடை

பெண்ணே! உன் புழைக்கடை யில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்ந்தது. அல்லி மலர் மூடிக் கொண்டது. சன்னியாசிகள் கோயிலுக்கு சங்கு ஊதச் செல்கின்றனர். சங்கு சக்கரம் ஏந்திய கமலக்கண்ணனை நாம் துதித்தல் வேண்டும். எழுந்திராய்.



29 December 2023

13.புள்ளின் வாய் கீண்டானை

13.புள்ளின் வாய் கீண்டானை

பகாசுரனையும், இராவணனையும் அழித்தவனான கண்ணனைப் பாடி நோன்பு நோற்கும் பிள்ளைகள் களத்திற்குச் சென்று விட்டார்கள். சுக்கிரன் உச்சிப்பட்டு வியாழன் மறைத்தான். நீயும் எங்களோடு சேர்ந்து வாராய்.



28 December 2023

12. கனைத்து இளங் கற்று

12. கனைத்து இளங் கற்று

கிருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையவனுடைய தங்கையே! இராவணனைக் கொன்ற இராமனை நினைத்தாலே மனதுக்கு இன்பத்தைத் தரும். அவன்  பேரைச் சொல்லியும் நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். நீ சீக்கிரம் எழுந்திராய்.


27 December 2023

11.கற்றுக் கறவை

11.கற்றுக் கறவை

கண்ணனுக்கு ஏற்ற தங்கக் கொடி போன்றவளே ! கிருஷ்ணனின் செல்வப் பெண்டாட்டியே! மயில் போன்ற சாயல் உடையவளே! உன் தோழிமார்களாகிய நாங்கள் உன் முற்றத்தில் வந்து நின்று கண்ணனை துதிக்கின்றோம்! நீ எழுந்து வாராய்.


 

26 December 2023

10.நோற்றுச் சுவர்க்கம்

10. நோற்றுச் சுவர்க்கம்...

பெண்ணே! வாசலைத் தான் திறக்கமாட்டாய். எங்களுக்கு பதிலாவது சொல்லக் கூடாதா? நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை நாம் துதித்தால் அவன் நமக்காக பலனைத் தந்திடுவான். கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்களித்தானா? கதவைத் திற.




25 December 2023

9. தூமணி மாடத்து

 9.தூமணி மாடத்து

வீடு முழுக்க விளக்கு எரிய பஞ்சணை மீது படுத்துறங்கும் மாமன் மகளே! தாழ்ப்பாளை திறந்து விடு, அவளுடைய தாயைப் பார்த்து, உன் மகள் ஊமையா? செவிடா? மீளா உறக்கம் கொண்டாளா? நாங்கள் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று ஆயிரம் நாமங்களும் சொல்லி விட்டோம். அவள்  எழுந்திருக்கவில்லையே.



24 December 2023

8. கீழ்வானம் வெள்ளென்று

 8.கீழ்வானம் வெள்ளென்று...

பெண்ணே! கீழ்வானம் வெளுத்து விட்டது. எருமைகள் பனிப்புல் சென்று விட்டன. கோபிகைகள் கிருஷ்ணனை துதிக்க போகாமல் உனக்காக அனைவரையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்பரம் பொருள் இரங்கி அருள் புரிவான். உடனே புறப்பட்டு வா.


23 December 2023

7 .கீசு கீசு என்று

7. கீசு கீசென்று...

பெண்ணே! பாரத்வாஜ பறவைகள் கீசுகீசு என்று ஒளி எழுப்புவது கேட்கவில்லையா? இடைப் பெண்கள் தயிர் கடையும் ஓசை கேட்கவில்லையா? நாங்கள் நாராயணனைத் துதித்து பாடுகின்றோம். கதவைத்திற.



22 December 2023

6.புள்ளும் சிலம்பின காண்

6. புள்ளும் சிலம்பின

பெண்ணே பறவைகள் கூவுகின்றன. கோயிலில் பெரிய சங்கின் ஒளி கேட்டிலையோ, பூதனையின் நச்சுப்பாலை உண்டவனை யோகிகளும், முனிவர்களும் தியானித்து துதிக்கும் ஹரிநாமம் கேட்கவில்லையா. எழுந்து வா.



21 December 2023

5. மாயனை மன்னு

5. மாயனை மன்னு

வடமதுரையில் அவதரித்தவனும், யமுனைத் துறை தலைவனும், திருவிளக்கைப் போன்று ஒளி உடையவனுமான தாமோதரனை தூய புஷ்பங்கள் கொண்டு தூவி, அவன் நாமங்களைப் பாடினால் நம் பாவங்கள் தீயிலிட்ட தூசு போன்று உருத் தெரியாமல் போகும்.


20 December 2023

4. ஆழி மழைக் கண்ணா!

4. ஆழி மழைக் கண்ணா! 

மழைக்கு அதிபதியான வருணனே! நீ கடல் நீரைப் பருகி, நாராயணன் உருவம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, சங்கு போல் இடி இடித்து உலகம் வாழும்படியாக மழை பெய்திடாய்.



19 December 2023

3. ஓங்கி உலகளந்த...

3. ஓங்கி உலகளந்த...

திரிவிக்ரமனை அதிகாலையில் நாம் நீராடி துதித்தால் மாதம் மும்மாரி பெய்யும். விவசாயம் செழித்திடும். பசுக்கள் குடம் குடமாய் நிறைய பால் சொரியும். குறைவற்ற செல்வம் நிறைந்திடும்.




18 December 2023

2. வையத்து வாழ்வீர்காள்!

2. வையத்து வாழ்வீர்காள்! 

இந்த விரதத்தின் போது தினமும் அதிகாலையில் நீராடுவோம். நெய், பால் உட்கொள்ளோம். மைதீட்டோம். மலரைச் சூடோம். செய்யத் தகாதவற்றை செய்யோம். பெரியோர் வழி கடைபிடிப்போம்.




17 December 2023

1. மார்கழித் திங்கள்

 மார்கழித்திங்கள்...

இடைப்பெண்களே! இது மார்கழி மாதம் சந்திரன் பூரணமான நன்னாளில் நாம்
நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினால், அவன் நம் விரதத்திற்கான பலனை அளித்திடுவான். வாருங்கள்.




முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.



29 November 2023

பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வார் ...

 திருவாலி திருநகரி திருமங்கை ஆழ்வார் அவதார உற்சவம் ---

 பரகால நாயகி திருக்கோலத்தில்  திருமங்கை ஆழ்வார் 



28 November 2023

திருப்பாணாழ்வார்

 இன்று ஸ்ரீ திருப்பாணாழ்வார்  அவதார  திருநட்சித்திரம்  ....  கார்த்திகையில் ரோஹிணி ...




27 November 2023

திருமங்கை ஆழ்வார்...

 கார்த்திகையில் கார்த்திகை .....

நீலன், கலியன், ஆலிநாடன், அருள்மாரி, அரட்ட முக்கி அடையார் சீயம், கொங்கு மலர்க் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்ற வேல் பரகாலன், நாலுகவிப் பெருமாள், குமுதவல்லி மணாளன்,
திருமங்கை ஆழ்வார் அவதார நந்நாள் இன்று !




23 November 2023

கைசிக ஏகாதசி .....!!!

 கைசிக ஏகாதசி.....!!! 

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".



16 November 2023

ஆறுமுகம் தோன்றும் ...




 திருமுருகாற்றுப்படை


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன் .6

15 November 2023

பூக்கும் கடம்பா முருகா ...

ஓம் சரவணபவ



 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி. (8)

12 November 2023

தீபாவளி வாழ்த்துக்கள்....

  அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....




         

02 November 2023

நாமக்கல் ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ..

நேற்று நடைபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா காட்சிகள் இன்று ..






31 October 2023

10. மீனாட்சி அம்மன் சடையலம்புதல் உற்சவம் -

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்

 8.  நவராத்திரி எட்டாம் நாள் --  அன்னை  மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...

9. நவராத்திரி ஓன்பதாம் நாள் --  அன்னை  மீனாட்சி  சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். 

10. நவராத்திரி பத்தாம் நாள் திருவிழா  மீனாட்சி அம்மன் சடை அலம்பல் உற்சவம் --- மகிஷாசுரனை வதம் செய்த அன்னை தன் கூந்தலை பொற்றாமரை குளத்தில் அலசி சுந்தரேஸ்வரர் இருப்பிடம் சேர்த்தியாகிறார்.

30 October 2023

9. அன்னை மீனாட்சி சிவபூஜை அலங்காரத்தில்

 

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்

 8.  நவராத்திரி எட்டாம் நாள் --  அன்னை  மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...

9. நவராத்திரி ஒன்பதாம் நாள் --  அன்னை  மீனாட்சி  சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். 


8. அன்னை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில்...

  1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்

 8.  நவராத்திரி எட்டாம் நாள் --  அன்னை  மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...

28 October 2023

7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

7.  நவராத்திரி ஏழாம் நாள் -- அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.


63. "அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே"

 63. "அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே"



27 October 2023

6. மீனாட்சியம்மன் ஊஞ்சல் ஆடும் கோலத்தில்....

 1.   நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

2.  நவராத்திரி  இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

3. நவராத்திரி  மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!

4. நவராத்திரி நான்காம் நாள் -    கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...

5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....

6.  நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.


25 October 2023

ஸ்ரீ பேயாழ்வார்

  ஸ்ரீ பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...  ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...




24 October 2023

ஸ்ரீ பூதத்தாழ்வார்

 ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...



23 October 2023

ஸ்ரீ பொய்கையாழ்வார்

 இன்று ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சித்திரம் -  ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....






17 October 2023

அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....

  நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை  மீனாட்சி....

 நவராத்திரி  இரண்டாம் நாள். 

மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி இரண்டாம்  நாளில்   அன்னை மீனாட்சி  அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில் காட்சி தருகிறாள்.....


16 October 2023

ராஜராஜேஸ்வரியாக அன்னை மீனாட்சி....

  நவராத்திரி முதல்நாள் - 

மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி முதல் நாள்  அன்னை மீனாட்சி  ராஜராஜேஸ்வரியாக காட்சி தருகிறாள்.



23 September 2023

ஸ்ரீ திருநாராயணபுரம்

ஸ்ரீ  திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டை ....

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா வட்டத்தில் மேலுகோட் (மேல்கோட்டை) காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். 

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலைக் கிராமம். இந்த இடம் திருநாராயணபுரம், யாதவகிரி அல்லது யதுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. 

மேல்கோட்டையில், ஶ்ரீ செல்வநாராயணர் கோயில் மலையடிவாரத்திலும், ஶ்ரீ யோகநரசிம்மர் கோயில் மலை உச்சியிலும்   அமைந்துள்ளது.




18 September 2023

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்.