01 December 2023

திருமங்கை மன்னன் திவ்ய தரிசனம்...

திருமங்கை மன்னன்  திவ்ய தரிசனம்... 




















 பெரிய திருமொழி -  மூன்றாம் பத்து 


3- 7  கள்வன் சொல் 
 திருவாலி 3

அன்னையும் அத்தனும் என்று*  அடியோமுக்கு இரங்கிற்றிலள்* 
பின்னைதன் காதலன்தன்*  பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்*  வென்று இலங்கும் இடையாள் நடந்து* 
புன்னையும் அன்னமும் சூழ்*  புனல் ஆலி புகுவர்கொலோ!

1214

          


முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும், பேசுகின்ற*    
சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
மற்று எல்லாம் கை தொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    

1215

          


காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப்பாவை ஒப்பாள்* 
பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!

1216

          


தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடு மால் துணையா* 
போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்*  ஒலி செய் தமிழ் மாலை பத்தும்* 
மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)

1217



முந்தைய பதிவுகள் ...





ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!



அன்புடன்,
அனுபிரேம் 🌻🌻🌻

No comments:

Post a Comment