திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேசுவரர் திருக்கோவில்.
மற்ற இடங்களில் மலைமேல் சுவாமி இருப்பார், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம்.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.
இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது.
தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.