நாயகனாய் நின்ற ..
கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்:
நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு
அன்புடன்
அனுபிரேம்
கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு
"எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே !
கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே !
அழகிய தாழ்ப்பாளைத் திறப்பாயாக!
நாங்கள் உள்ளே செல்லவேண்டும்.
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான் நேற்றே விரும்பியதைக் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்.
எனவே, அவனை துயிலெழுப்பி பாட தூய்மையுடன் வந்துள்ளோம்.
முதலிலேயே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள கதவை திறந்து எங்களை உள்ளேவிடு" என்று சொல்கிறாள் ஆண்டாள்!
ஆண்டாள் விண்ணோர்களை எழுப்பும் பாசுரங்கள் (16 முதல் 20 வரை), அதில் முதல் பாசுரம் (16) , விண்ணோர்களாகிய ஜெயன், விஜயர்களைச் சொல்லும் பாசுரம் இது என பூர்வாசார்யர்கள் சொல்வர்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
திவ்ய தரிசனம்
ReplyDeleteஅழகான படங்களுடன் பாசுரம் பகிர்வு அருமை.
ReplyDeleteநல்லாருக்கு அனு..
ReplyDeleteகேஷவ்வின் படம் உங்கள் தளத்தில் துரை அண்ணா தளத்திலும் வித்தியாசமாக இருக்கிறது...நான் அடடா நாம் பாசுரம் வேறா ந்னு மீண்டும் செக் செய்தேன்...ஆனா அதே பாசுரம் தான்..கேஷவ் வித விதமாகப் போட்டிருக்கார் போல..சூப்பர் அங்கும் படம் அருமை இங்கும் அருமை...இங்கு 2017 படம் அங்கு 2016 படம்...இப்போது புரிகிறது...
கீதா
முதலில் நானும் துரை சார் தெரிவு செய்து இருந்த படங்களையே தெரிவு செய்து இருந்தேன் ..
Deleteமுதல் நான்கு பதிவும் போட்டேன் ..பின் கண்டிப்பாக இருவர் தளத்துக்கும் பொதுவான நண்பர்களே அதான்.. திரும்ப அடுத்த வருடம் கேசவ் சார் போட்ட படங்களை தேடி எடுத்து சேமித்தேன் ..இப்பொழுது பகிர்கிறேன் ...
பார்க்கும் போது மனம் மகிழ வேண்டும் அதானே நம் நோக்கம் ...
இந்த வருட கேசவ் சார் படங்கள் இன்னும் இன்னும் அழகு ...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDelete