21 December 2018

திருப்பாவை – பாசுரம் 6

புள்ளும் சிலம்பின காண்

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்






புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு

கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.





               நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு


பறவைகள் கூவிவிட்டன, கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு ️அழைப்பதைக் கேட்கவில்லையா? 

இளம் பெண்ணே! எழுந்திரு!

பூதனா என்றும் அரக்கியை வதைத்து,
வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான் கிருஷ்ணன்!

பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு,
 உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று சொல்லும் ஒலியைக் கேட்டு ️ எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. படங்கள் அற்புதம்.


    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. ஆண்டாளை தரிசித்தேன் சகோ

    ReplyDelete
  3. பாசுரம் கண்டேன், கேஷவ் ஓவியம் கண்டேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. ஆண்டாள் அழகு மனசை கொள்ளை கொண்டது

    ReplyDelete