'புள்ளின் வாய் கீண்டானை'
"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"
நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு
அன்புடன்
அனுபிரேம்
"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்.
நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு
பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும்,
கொடிய இராவணனுடய தலையைக் கிள்ளியெறிந்த
திருமாலைப் பாடிக்கொண்டு பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள்.
சுக்கிரன் உச்சிக்கு வந்து குரு மறைந்துவிட்டது.
திருமாலைப் பாடிக்கொண்டு பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள்.
சுக்கிரன் உச்சிக்கு வந்து குரு மறைந்துவிட்டது.
பறவைகள் கூவுகின்றன பூப்போன்ற மான்கண் உடையவளே
உடல் குளிர நீராடாமல் படுத்து கிடக்கிறாயோ?
நீ உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டுவிட்டு
எங்களுடன் வந்து கலந்துவிடு!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
காலை தரிசனம் நன்று
ReplyDeleteதரிசனம் செய்தேன்,
ReplyDeleteசிறப்பான பகிர்வு. தொடரட்டும் மார்கழி பதிவுகள்.
ReplyDelete