18 December 2018

திருப்பாவை – பாசுரம் 3


ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்





ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,

தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் 

நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு


மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோம்பிற்கு நீராடினால்,
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும்,

அதனால் செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும், 
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன.
ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பாடலும், படங்களும் அருமை.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. கேசவ் ஓவியத்துடன், பாடல் அருமை.

    ReplyDelete
  3. கேசவ் ஓவியம் அழகு!!!

    கீதா

    ReplyDelete
  4. படங்கள் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete