Showing posts with label வாரணாசி. Show all posts
Showing posts with label வாரணாசி. Show all posts

16 August 2023

22. பிந்து மாதவ பெருமாள் கோவில், வாரணாசி

 பிந்து  மாதவ பெருமாள் கோவில்

பிந்து மாதவ் கோயில், பஞ்சகங்கா காட் என்ற இடத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கோயில். இங்கு உள்ள  நம்பிக்கை என்னவென்றால், விஷ்ணு பகவான் பஞ்சகங்கா காட்டில் நீராடி, இங்கு பிந்து மாதவ் கோயிலை நிறுவினார் என்பது. 


 காசியின் மற்ற புகழ்பெற்ற கோயில்களைப் போலல்லாமல், பிந்து மாதவ் கோயில் எப்போதும் நாராயண பக்தியோடு அமைதியாக  உள்ளது. 


10 August 2023

21.காசி நகரமும் கால பைரவர் கோவிலும் ...

காசி நகரமும் கால பைரவர் கோவிலும் 

சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும் எக்காலத்தும் அழியாததுமான நகரம் காசியாகும். காசியில் சிவபெருமான் எப்போதும் நீங்காது வாசம் புரிகிறார். அதனால், இது சிவவாசம் என்றும்  போற்றப்படுகின்றது.

காசியிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவமூர்த்தி அனேக பெயர்களில் எழுந்தருளியுள்ளார். இவற்றின் தலைமையிடம் காலபைரவர்  சந்நதியாகும். இது காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.



28 July 2023

கங்கா ஆரத்தி !

வாழ்க வளமுடன் 

பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே 'கங்கா ஆரத்தி'. 



11 July 2023

14. ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் ....

 காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம் 

 கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.  இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.