19 January 2026

திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026

 திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026 (132ஆம் ஆண்டு)

தை அமாவாசை (18/01/2026) தொடங்கி 3 நாட்கள் திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்-12 கி.மீ) 11 எம்பெருமான் களின் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

திருமங்கை ஆழ்வாரே இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம். இந்த உற்சவத்தைப் பற்றிய விவரங்களை இந்தத் தொடரில் அனுபவிப்போம்.


15 January 2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  அனைவருக்கும்  எங்களின் இதயம் கனிந்த 

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !! 




13 January 2026

திருப்பாவை 30

  முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். 

அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். 







12 January 2026

திருப்பாவை 29

 இருபத்தொன்பதாம் பாசுரம் -  இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.