19 April 2026

ஸ்ரீ உய்யக்கொண்டார் - சித்திரையில் கார்த்திகை

 இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)







18 April 2026

14 April 2026

பராபவ ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு -வாழ்த்துகள் !!

                       பராபவ ஆண்டு தமிழ்ப்  புத்தாண்டு -வாழ்த்துகள் !!


நம்பெருமாள் சித்திரை முதல் நாள் ஆஸ்தான மண்டப சேவை




03 April 2026

திருவரங்கத்து அமுதனார் --- பங்குனி ஹஸ்தம்.

அண்ணல் இராமானுசரை, அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம்  -  நேற்று  (02/04/2026)--பங்குனி ஹஸ்தம்.




திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !


"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !

எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !

நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !

நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !

பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !

பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !

அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !

அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"

01 April 2026

பிரணய கலகம்! --- மட்டையடி உற்சவம்

 இன்று  பங்குனி உத்திரம்-நம்பெருமாள், பெரிய பிராட்டியார்  சேர்த்தி உற்சவம்: பிரணய கலகம் !



31 March 2026

ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!

 ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!


எட்டாம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,(கண்ணாடி அறை) பல வீதிகள் வழியாக 16 மண்டபங்களில்/இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி  5 கி.மீ.தொலைவிலுள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு 9 கி.மீ சுற்றி பகல் 01.15க்கு எழுந்தருளினார்.

செல்லும் வழியில் இரண்டு தீர்த்தங்களில் --அஸ்வ தீர்த்தம்,பிலவ தீர்த்தம்--திருவடி(சடாரி) விளக்கினார்.

(இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்து, தூய்மைப் படுத்தும் கைங்கர்யத்தை கோவையைச் சேர்ந்த அடியார் ஸ்ரீ ஜெகதீச ராமாநுஜ தாச  அற்புதமாகச் செய்துள்ளார்;அவருக்குப் பல்லாண்டு பாடுவோம்) 

எல்லைக்கரை மண்டபத்தில் திருவாரதனை,அலங்கார அமுது கண்டருள்கிறார். மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு,மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்து கிழக்குச் சித்திரை வீதியில் (கோரதம் அருகில்) இரவு 8 மணிக்கு வையாளி கண்டருள்கிறார். இரவு 9.மணிக்கு ஆஸ்தானம் வந்தடைகிறார்.