"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,
தீபக்த்யாதி குணார்ணவம்,
யதீந்திர ப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--
தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று (29/6/2026)
ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான,
ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில் எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!








