10 July 2025

7.புரி பஹுதா யாத்திரை

பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 

4.மூன்று இரதங்கள் ...

5. ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

6. " ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!

இந்த ஆண்டு ரத யாத்திரை நிறைவு பெற்றாலும் இன்னும் அதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் படங்களும் தொடரும் ...

7. புரி பஹுதா யாத்திரை

குண்டீசா பவனத்திலிருந்து மீண்டும் ஸ்ரீமந்திரம் என்னும் தன்னுடைய கோயிலுக்கு ஸ்ரீ ஜெகந்நாதர்  செல்லும் ரத யாத்திரை... 



09 July 2025

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள்--ஆனி மூலம்

 "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,

தீபக்த்யாதி குணார்ணவம்,

யதீந்திர ப்ரவணம்,

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--

தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று  (09/07/2025)

அதி ஆச்சர்யமாக இதே ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான, 

ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில்  எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!




05 July 2025

ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)

 இன்று  ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)




இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம். 

பெரியாழ்வார் என்ற பெயர் எதனால் வந்தது என்று பலருக்கு தெரிந்திருக்கும்.

  ‘பொங்கும் பரிவாலே’ வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேசரத்தின மாலையில் குறிப்பிடுகிறார். 

மற்ற ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்ளாசாசனம் ( பல்லாண்டு பாடுவது ) செய்தாலும், பெரியாழ்வார் போல அவர்கள் செய்யவில்லை. 

பெருமாளிடம் கோபித்துக்கொண்டார்கள், என்ன வேண்டுமோ அதைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று எண்ணி அவருக்குப் பல்லாண்டு பாடியதால் இவர் பெரியாழ்வார் ஆனார். 

ஸ்ரீவேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் பெரியாழ்வார் என்ற பெயர் ஏன் வந்தது என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறார்.  ஆண்டாள் திருமுடியில் சூடிக் கொடுத்து அதனால் மணம் பெற்ற மாலையைக் களைந்து அதை அதை எம்பெருமானுக்கு விட்டு சித்தர் மூலமாக ஸ்மர்பித்தாள். இதனால் மனம் உகந்து விட்டுசித்தரைப் மெச்சி ‘பெரியாழ்வார்’ என்ற திருநாமத்தை தந்தான் என்கிறார். 

நல்ல செய்தி சொல்லுபவருக்கு அரசன் உடனே தன் முத்து மாலையைக் கழட்டி கொடுப்பதில்லையா ? அது போல தான். சாதாரண செய்திக்கே முத்து மாலை என்றால் ஆண்டாளின் மாலைக்கு ? அதனால் தான் பெரியாழ்வார்