31 March 2026

ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!

 ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!


எட்டாம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,(கண்ணாடி அறை) பல வீதிகள் வழியாக 16 மண்டபங்களில்/இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி  5 கி.மீ.தொலைவிலுள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு 9 கி.மீ சுற்றி பகல் 01.15க்கு எழுந்தருளினார்.

செல்லும் வழியில் இரண்டு தீர்த்தங்களில் --அஸ்வ தீர்த்தம்,பிலவ தீர்த்தம்--திருவடி(சடாரி) விளக்கினார்.

(இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்து, தூய்மைப் படுத்தும் கைங்கர்யத்தை கோவையைச் சேர்ந்த அடியார் ஸ்ரீ ஜெகதீச ராமாநுஜ தாச  அற்புதமாகச் செய்துள்ளார்;அவருக்குப் பல்லாண்டு பாடுவோம்) 

எல்லைக்கரை மண்டபத்தில் திருவாரதனை,அலங்கார அமுது கண்டருள்கிறார். மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு,மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்து கிழக்குச் சித்திரை வீதியில் (கோரதம் அருகில்) இரவு 8 மணிக்கு வையாளி கண்டருள்கிறார். இரவு 9.மணிக்கு ஆஸ்தானம் வந்தடைகிறார்.




மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணர் வைரமுடி சேவை 2026

 மேல்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வநாராயண பெருமாள் திருக்கோயில் - வைரமுடி உத்ஸவம் - திவ்ய ஸேவை

பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் 'வைரமுடிச் சேவை' விழாவில், இராமானுசர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர். 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, திருமலை பிரம்மோற்சவம், காஞ்சிபுரம் கருடசேவை போல வைணவார்களால் பெரிதும் போற்றப்படும் மிகப்பெரிய திருவிழா "மேல்கோட்டை வைரமுடி சேவை" யாகும்.


நேற்று நடைப்பெற்ற வைரமுடி சேவையின் காட்சிகள் இன்று ...



30 March 2026

ஸ்ரீநம்பெருமாள் - கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை 2026

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்-- பங்குனி திருநாள் (ஆதி பிரம்மோற்சவம்) 6-ம் திருநாள்  

ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நேற்று -

நம்பெருமாள் உறையூர் புறப்பாடு



27 March 2026

16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்...





ஸ்ரீ ராம நவமி

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.

இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.




26 March 2026

108 வரிகளில் இராமாயணம் ...


வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணத்தின்  ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில்...