29 June 2026

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள் -- ஆனி மூலம்

                                            



                                                   "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,

தீபக்த்யாதி குணார்ணவம்,

யதீந்திர ப்ரவணம்,

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--

தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று  (29/6/2026)

 ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான, 

ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில்  எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!

28 June 2026

ஸ்ரீரங்கம், பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம்

 ஸ்ரீரங்கம்,பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம் - இன்று (28/06/2026)




அரங்கருக்கு வருடாவருடம் ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை) நட்சத்திரத்தன்று , விசேஷமாக திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.

 ."ஜேஷ்டா" என்ற ஸம்ஸ்க்ருத சொல் 'பெரிய' என்ற பொருள் உரைக்கும். ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் (கேட்டை ) என்றால், 'பெரிய நட்சத்திரம்'என்றும் பொருள் கொள்ளலாம்.