17 December 2017

தொண்டரடி பொடியாழ்வார்




இன்று  (17.12.2017)  தொண்டரடி பொடியாழ்வார்   அவதார தினம் .....

மார்கழியில் கேட்டை.....









 தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!


மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே

மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே

தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே

திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே

பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே

பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே

தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே

தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே..!



திருப்பாவை 2










16 December 2017

திருப்பாவை 1 ...












அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழு நிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

10 December 2017

லக்ச தீபம் ...


வாழ்க வளமுடன்...




 ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு லக்ச தீபம் ஏற்றப்பட்டது ..


அதன் அழகிய படங்கள் இன்று ....




04 December 2017

ஆழ்வார்கள் தரிசனம்..


வாழ்க வளமுடன்...




முந்தைய பதிவுகளில் 

திருமங்கையாழ்வார்  அவதார பற்றியும்

திருப்பாணாழ்வார்  அவதாரம் பற்றியும் ..தரிசித்தோம்...


இன்று அவர்களின் புகைப்பட உலா...

போன வருடம்  .....அப்பா ஆழ்வார்களின்  அவதார தலங்களில் தாம் தரிசித்து எடுத்த  படங்கள் இன்று ..இங்கே  ஆழ்வார்கள் தரிசன  உலாவாக...


திருமங்கையாழ்வார்......




03 December 2017

திருப்பாணாழ்வார்


இன்று  (3.12.2017) திருப்பாணாழ்வார்  அவதார தினம் .....

கார்த்திகையில் ரோஹிணி..










 திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!


உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே

உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே

வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே

மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே

அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே

அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே

செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே

திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!




02 December 2017

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்


இன்று  (2.12.2017)  சனிக்கிழமை   திருமங்கையாழ்வார்  அவதார தினம் ..... கார்த்திகையில் கார்த்திகை













  திருமங்கையாழ்வார்  வாழி திருநாமம்!


கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே

காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே

நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே

நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே

இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே

இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே

வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே

வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!


01 December 2017

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்



கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.



சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது.


முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.


மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.