அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக !
ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....
அன்புடன்
அனுபிரேம்
நன்றியுடன் தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆறாம் திருப்பாவை அறிந்தேன் நன்று
ReplyDeleteதொடர்கிறேன் அறிய
ReplyDeleteஆண்டாள் திருவடிகள் போற்றி..
ReplyDeleteநன்றி......
ReplyDeleteஅருமை... அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.
ReplyDelete