11 December 2017

செல்லம்மாள்...

வாழ்க வளமுடன்.....


இன்று மகா கவி பாரதியின் பிறந்தநாள்.......









 திருமதி செல்லம்மாள் பாரதி தில்லி வானொலியில்    ”பாரதி அறியாத கலை”   என்ற தலைப்பில் ஆற்றிய முதல் உரை.......!!!



எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!


என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படிக் கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.

நான் படித்தவளல்ல.

ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.

சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்;

அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள்.

ஆம். தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார்.

சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது.

புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.

அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும் பொழுதைச் செலவிடுவார்.

 பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை.

என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.

அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை.

ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார்.

இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம் - என்னால் மறக்க முடியாது.

மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது.

சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை.

மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன.

அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது.

 ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது.

'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார்.

'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன்.

கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார்.

 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.

மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது.

அதைக் கேட்ட ஜனங்கள்  ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.




இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம்.

அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.

அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது!

நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.

அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை நாராயண நாமத்தை ஜபித்தார்.

(இணையத்திலிருந்து)



பாரதியின் வாழ்க்கை வரலாறு....! ... போன வருட பதிவு....


வளர்க கவியின் புகழ்.....!


அன்புடன்
அனுபிரேம்








8 comments:

  1. //பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை//

    பாரதியின் வாழ்க்கையின் சிறப்பம்சம் இதுவே.
    பாரதியின் பிறந்தநாளை போற்றுவோம்.

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு..
    மகாகவியைப் போற்றுவோம்!..

    ReplyDelete
  3. ந்ல்லதொரு பதிவு அனு. அதுவும் பாரதியின் மனைவி செல்லம்மாவின் வார்த்தைகள் அருமை!!
    கீதா

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு. முண்டாசுக் கவிஞனுக்கான நாளில் செல்லம்மாவின் வார்த்தைகள்... நன்றி.

    ReplyDelete
  5. பாரதி பிறந்தநாளில் மிக அருமையான பதிவு அனு.

    ReplyDelete
  6. பணம் உண்டாக்கும் கலை அறியாததாலே அவர் தேசிய கவி....
    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete