திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
ஸ்ரீரெங்கம் கண்ணாடிஅறை சேவை ...
அன்புடன்
அனுபிரேம்..
படங்களுடன் பாவையும் அழகு .. அருமை..
ReplyDeleteவாழ்க நலம்..
__/\__
ReplyDeleteபடமும் விளக்கமும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteபடங்க்ள் ரொம்ப அழகா இருக்கு....பாடல் பைஹார்ட்!!! விளக்கமும்..அருமை!! அந்த பொம்மைகள் செம....
ReplyDeleteகீதா