27 January 2015

சுற்றுலா - கர்நாடகா -கொல்லூர் 2

அனைவருக்கும்  வணக்கம் பல  ...

நேற்றைய பதிவில்  கர்நாடகா -கொல்லூர் பற்றி ஆரம்பித்தேன் ...

மேற்கு தொடர்ச்சி மலையில் கொடசத்ரி உச்ச பள்ளத்தாக்கில் இருந்து மங்களூருக்கு 135 கி.மீ மற்றும் உடுப்பி இருந்து 80 கி.மீ. தொலைவில், ஒரு அமைதியான நகரம் கொல்லூர் .பார்வதி தேவி  கோயில் சரியாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்  இருக்கும்  வற்றாத நதி சௌபர்ணிகா  கரையில் அமைந்துள்ளது.


அம்மன் 

வரலாறு -

  • இது பார்வதி தேவிக்காக   பரசுராமரால் உருவாக்கப்பட்ட கோவில்  என்று நம்பப்படுகிறது.


  • தேவி மூகாம்பிகை சிவன் மற்றும் சக்தி இருவரையும் இணைத்து ஜோதிர்-லிங்க (Jyothirlingam) வடிவில் இருக்கின்றாள் .


  •  பகவான் சங்கரர் முதன் முதலில் இந்த இடத்திற்கு வந்தபோது, கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் இருந்தது..பின் ஸ்ரீசங்கராச்சாரியார் அம்மன் உருவம் லிங்கதிர்க்கு பின் மறைந்து உள்ளதை அறிந்து  தவம் மேற்கொண்டார் ....அம்மா மூகாம்பிகை ஆச்சார்யார்  முன் தோன்றினார்.  ஸ்ரீ சங்கரர்  மனதில் தோன்றிய அம்மா மூகாம்பிகையை   அடிப்படையாக கொண்டு அம்மா மூகாம்பிகை சிலையை  ஸ்ரீ சங்கரர் செய்வித்தார்... 

  பின்  ஸ்ரீ சக்ரா மேல் இருக்கும் தேவியின் பஞ்சலோக படத்தை  ஆதி சங்கரர் அமைத்தார் .

  •   அபிஷேகம்  லிங்கத்திற்கு  செய்யப்படுகிறது. பிற அலங்காரம்   தேவிக்கு  செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யும் போது பக்தர்களுக்கு   லிங்கம் மத்தியில், ஒரு தங்க கோடுதெரியும் ... இது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி  வலது பக்கமும்  பிரம்மா, விஷ்ணு  லிங்கத்தின்  இடதுபக்கமும் இருந்து அருள்  அளிப்பதாக கூறப்படுகிறது. 


  • கோல மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்ததால்   கொல்லூர் என அழைக்கப்பட்டு வருகிறது. 


  • வழக்கமாக , கோயில் கதவுகள் கிரகண காலத்தில் மூடப்படும் , ஆனால் இந்த கோவிலில் ஒரு விதிவிலக்கு. .பூஜைகளை கிரகண காலங்களில் கூட தொடர்ந்து செய்கின்றனர் ... 


  •  தேவி மூகாம்பிகை   நான்கு கைகள்,  மூன்று கண்கள் மற்றும் தனது கையில்  தெய்வீக சங்கு சக்கரத்துடன் காட்சி  அளிக்கின்றார். 


  • கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில்  புனித நதியான சௌபர்ணிகா கரையில் அமைந்துள்ளது. நதி ஓடுகிறது பாதையில்   64 வெவ்வேறு மருத்துவ வேர்கள் மற்றும் தாவரங்களின்  சக்திகளை  உறிஞ்சுகிறது. எனவே, அது  பக்தர்களின்  அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்த ஆற்றின்  தண்ணீர் கோவிலின்   தீர்த்தமாக  பயன்படுத்தப்படுகின்றது.


  • தேவி மூகாம்பிகை சரஸ்வதி, சக்தி மற்றும் மகாலட்சுமியின்  வெளிப்பாடு என கருதப்படுகிறது.
முகப்பு 
முகப்பு 



தொடரும்...

கொல்லூர் 3



அன்புடன்
அனுபிரேம்



25 January 2015

சுற்றுலா - கர்நாடகா -கொல்லூர்


அனைவருக்கும்  வணக்கம் பல  ...

மீண்டும்  ஒரு சுற்றுலா - இந்த  முறை சென்றது உத்தர கர்நாடகாவிற்கு ...முன்பே ஒரு முறை முயன்று செல்ல இயலவில்லை ...

நவம்பர் மாதம் சந்தித்த  என் நெருங்கிய தோழி தான்  சென்ற கோவில்களை  பற்றி கேட்டதும் எங்களுக்கும்   செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது .....

அதனால் நாங்கள் 2 மாதம் முன்பே இரயிலில் பயண சீட்டு  பதிவு செய்து ஜனவரி 1 காக காத்திருந்தோம் ...

எங்களது இரயில் இரவு 8 மணிக்கு பயணத்தை  ஆரம்பித்தது ......காலை 8 மணிக்கு மங்களூர் சென்றது ...


காலை 11 மணிக்கு உடுப்பியை  அடைந்தது ....



 கொல்லுர்க்கு செல்லும் போது  காலை 12 மணி ...


அங்கேருந்து டாக்ஸி மூலம் கொல்லூர் மூகாம்பிகா கோவிலை அடைந்தோம்...

ரயிலில் செல்லும் போது பல இயற்கை காட்சிகள் மிகவும் அழகு ....


தொடரும்...

கொல்லூர் 2


கொல்லூர் 3


அன்புடன்
அனுபிரேம்

10 January 2015

நெய் பிஸ்கட் -butter cookies

இனிப்பான காலை வணக்கம் ...

இன்றைய பதிவு...நெய் பிஸ்கட்  -butter cookies செய்முறை




தேவையானவை

1.மைதா  -1 ட

2.வெண்ணெய்  -1\3 ட

3.பொடித்த  சர்க்கரை  -1\3 டம்ளர்

4.வென்னில்லா ess.  -1\2   டீ ஸ்பூன்

5.உப்பு                      - சிறிது


செய்முறை

முதலில் oven யை 180 டிகிரி யில் 10 நிமிடம்  preheat செய்ய வேண்டும்

1. மைதா மாவை   சலிக்கவு ம்  ..

2.வெண்ணெய் மற்றும் பொடித்த  சர்க்கரையை  நன்றாக  கிரீம் ஆகும் வரை கலக்கவும் ...

3.பிறகு  அதில் வென்னில்லா ess.யை சேர்க்கவும்..

4.பின் சலித்த  மாவை  சேர்த்து  நன்றாக  பிசைய வேண்டும்...

5.அந்த மாவை  சிறிதாக பிஸ்கட் அளவில்  செய்து preheat  செய்த oven இல்

15 நிமிடம்  bake  செய்தால் butter cookies  ரெடி ....

நான் bake  செய்வதற்கு முன் சீரக மீட்டாய்  சேர்த்தேன் ...அதன்  சுவையே  தனி ... 



அன்புடன்
அனுபிரேம்