ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்
2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
7.ஶ்ரீபார்த்தசாரதி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
8.ஆராவமுதன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
9. ஒன்பதாம் திருநாள்
மூலவர் -செல்வநாராயணன் ( மேல் கோட்டை திருநாராயணபுரம்)
உற்சவர் - உலகளந்த பெருமாள் திருக்கோலத்தில்
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
12. மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
ஒன்பதாம் பாசுரம். உங்களுக்குப் பழிவராமல் இருக்கவேண்டும் என்றால் என்னை த்வாரகைக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.
கூட்டிலிருந்து கிளி எப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்
நான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்துகொண்டு எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று கூவிக்கொண்டிருந்தது. அதற்கு உணவு கொடுக்காமல் தண்டனை கொடுத்தேனாகில் உலகளந்த பெருமானே! என்று கூவுகின்றது. இந்தத் திருநாமங்கள் என் காதில் விழுந்தால் நான் மயங்கி விழுகின்றேன். ஆகையால், இந்த உலகில் பெரிய பழியைச் சம்பாதித்து உங்கள் பெயரையும் கெடுத்துக்கொண்டு தலை கவிழ்ந்து நிற்கவேண்டாதபடி உச்சிப் பகுதி மிகவும் உயர்ந்திருக்கும் மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற த்வாரகையிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment