ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்
2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
5. ஐந்தாம் திருநாள்
மூலவர் - துவராபதி கண்ணன்
உற்சவர் - சோலை மலை பெருமாள் (திருமாலிருஞ்சோலை அழகர்) திருக்கோலத்தில்
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
12. மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
ஐந்தாம் பாசுரம். அங்கிருந்தவர்கள் இவளுக்கு உள்ள நோயை அறிந்து சரியான பரிஹாரம் செய்ய வேண்டும் என்று துக்கப்படத் தொடங்கினார்கள். இவள், நீங்கள் உறவினார்களாக இருக்கும் காரணத்தினால் மட்டும் என் நோயை அறிய முடியாது என்கிறாள்.
ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது
அம்மனைமீர்! துழதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்
கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக்
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்
தாய்மார்களே! என்னுடைய இந்த நோய் எப்படிப்பட்டவர்களுக்கும் அறிய முடியாதது. நீங்களும் துக்கப்படாமல் காளிங்கன் வசித்த மடுவின் கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி காளிங்கனின் தலையின் மேல் ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து அந்தப் பொய்கைக்கரையே ஒரு போர்க்களம் ஆகும்படியாக நர்த்தனம் செய்யப்பெற்ற பொய்கையின் கரையிலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள். கறுத்த கடல் போன்ற நிறத்தை உடையவனான கண்ணன் தனது திருக்கைகளால் என்னைத் தடவினால் இந்த நோய் தீர்ந்துவிடும். இது கைமேல் பலிக்கக்கூடிய வழி.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment