14 August 2026

7.ஶ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு சேவை ..

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்



3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்  ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

எட்டாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ஸ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.













நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

ஏழாம் பாசுரம் -- உன்னுடைய தர்மபத்தினிகளின் மேல் ஆணை, எங்கள் சிற்றில்களை அழிக்காதே என்கிறார்கள்.


520

பேதம் நன்கு அறிவார்களோடு இவை 

பேசினால் பெரிது இன் சுவை

யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை 

நீ நலிந்து என் பயன்?

ஓத மா கடல் வண்ணா! உன்

 மணவாட்டிமாரொடு சூழறும்

சேது பந்தம் திருத்தினாய்! எங்கள்

 சிற்றில் வந்து சிதையேலே  7


உன் பேச்சின் விதங்களை நன்றாக அறிய வல்லவர்களோடு இப்பேச்சுக்களை நீ பேசினால் உனக்கு மிகவும் இனிமையாக இருக்கும். ஒன்றும் அறியாத சிறு பெண்களான எங்களை நீ துன்புறுத்துவதால் என்ன பயன் உண்டு? அலைகள் பொருந்திய கடல்போன்ற திருநிறத்தை உடைய கண்ணனே! கடலில் அணை கட்டியவனே! உன்னுடைய தர்மபத்தினிகளின் மேல் ஆணை. எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.



ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment