11 August 2026

2. ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலில்

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்




3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி உலா புறப்பாடு.. 














நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 


இரண்டாம் பாசுரம் -- நாங்கள் மிகவும் முயன்று கட்டியிருக்கும் சிற்றில்களைச் சிதைக்காதே என்கிறார்கள்.


515

இன்று முற்றும் முதுகு நோவ 

இருந்து இழைத்த இச் சிற்றிலை

நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும்

 ஆர்வம் தன்னைத் தணிகிடாய்

அன்று பாலகன் ஆகி ஆலிலை

 மேல் துயின்ற எம் ஆதியாய்!

என்றும் உன்தனக்கு எங்கள் மேல்

 இரக்கம் எழாதது எம் பாவமே 2


இன்று முழுவதும் முதுகு நோகும்படி ஒரே இடத்தில் அசையாமல் இருந்து முயன்று செய்த இந்தச் சிற்றிலை நாங்கள் நன்றாகப் பார்த்து அனுபவிக்கும்படி எங்கள் ஆசையை நிறைவேற்று. மஹா ப்ரளயம் வந்த காலத்திலே ஒரு சிறு குழந்தையாகி ஓர் ஆலந்தளிரிலே சயனித்திருந்தவனாய் எங்களுக்குக் காரணபூதனானவனே! உனக்கு எங்கள் விஷயத்தில் எப்பொழுதும் இரக்கம் இல்லாமல் இருப்பதற்கு எங்கள் பாபமே காரணமாகும்.


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment