22 December 2018

திருப்பாவை – பாசுரம் 7

கீசு கீசு என்று
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?





கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய்.


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு


கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!

காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க, வாசனையுடைய கூந்தலை உடைய 
இடைப்பெண்கள் கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!

பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக!




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. நன்றாக இருக்கிறது சகோதரி/அனு

    ReplyDelete