21 October 2023

5. பார்த்தசாரதி கோவில்/ வேணுகோபாலசுவாமி கோவில் - தொண்டனுர்

 கோவிந்தா ஹரி கோவிந்தா ......


முந்தைய பதிவுகள் 



3. ஸ்ரீ யோக நரசிம்மர்  கோவில்,  மேல்கோட்டை.

 4. தொண்டனுர்  ஸ்ரீ நம்பி நாராயண சுவாமி திருக்கோவில்  



5.பார்த்தசாரதி கோவில்/ வேணுகோபாலசுவாமி கோவில் - தொண்டனுர் 

மூலவர்   : ஸ்ரீதேவி , பூதேவியுடன் பார்த்தசாரதி பெருமாள் 

உற்சவர்  : ருக்மிணி ,சத்யபாமா உடன் கோபாலகிருஷ்ணன்


நம்பி நாராயண சுவாமி  கோவிலுக்கு எதிரே உள்ள இக்கோயில் வேணுகோபாலசுவாமி திருக்கோவில்.







மூலஸ்தான கடவுள் பார்த்தசாரதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்,  அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார் (இவர் வீற்றிருந்த பெருமாள் - அமர்ந்த கோலத்தில் நாராயணர் என்றும் குறிப்பிடப்படுகிறார்).

 இந்த கோவில் நம்பி நாராயண கோவிலை விட பழமையானது எனவும்  மற்றும் அதன் வரலாறு துவாபர யுகத்திற்கு முந்தையது எனவும் கூறப்படுகிறது. 

 பாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்த இடத்தில் தங்கியதாக நம்பப்படுகிறது, எனவே பாண்டவபுரம் எனவும் கூறப்படுகிறது. குந்தியின் மூத்த மகன் யுதிஷ்டிரர் (பஞ்ச பாண்டவர்களில் ஒருவர்) இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது, மேலும் ப்ருகு முனி பகவான் பார்த்தசாரதியின் சிலையை நிறுவியதாகக் கூறப்படுகிறது. 


















ஸ்ரீ ராமானுஜர் தொண்டனூரில் தங்கியிருந்தபோது, இந்தக் கோயிலில் தங்கி, ஸ்ரீ நம்பி நாராயணசுவாமி கோயிலின் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

 இக்கோயிலின் மூலவர் "விற்றிருந்த பெருமாள்" என்றும், மைசூர் மன்னர் காலத்தில் யாதவ நாராயண - வசந்த கோபாலன் என்றும் அழைக்கப்பட்டார்.


உற்சவ மூர்த்தி வேணுகோபாலசுவாமி, கிருஷ்ணர் புல்லாங்குழல் பிடித்து ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் நடனமாடும் தோரணையுடன் இருக்கிறார். இது கிருஷ்ணரின் மிகவும் அழகான சிலை. 

பிரகாரங்கள் மிகப் பெரியவை மற்றும் பழமையானவை மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 

ஹோய்சாள மற்றும் சோழ வம்சத்தின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டிடக்கலை முன்மாதிரியாக உள்ளது.









1068.   

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  

வேழமும் பாகனும் வீழச்* 

செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  

சிவன் உறு துயர் களை தேவை* 

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  

பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 

சிற்றவை பணியால் முடி துறந்தானை*  

திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   



1069.   

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* 

 விழுமிய முனிவர் விழுங்கும்* 

கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை*  

குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

ஆதியை அமுதை என்னை ஆளுடை

 அப்பனை*  ஒப்பவர் இல்லா

 மாதர்கள் வாழும்* மாட மா மயிலைத்*  

திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)



ஸ்ரீ  பார்த்தசாரதி  பெருமாள் திருவடிகளே சரணம் ...


தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛

2 comments:

  1. பெருமாளின் திருநாமத்திற்கேற்ற பாசுரங்கள். நான் எழுதுவது இன்னும் சில வாரங்கள் கழித்து வரும் (ஆனால் படங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்)

    வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர்/முனிவர்கள் விழுங்கும். முனிவர் என்ற இடத்தில் தட்டச்சுப்பிழை. சரி பண்ணிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.

      தங்களின் குறிப்புகளை வாசிக்க ஆவல் ...எழுதுங்கள் நீங்கள் இன்னும் பல செய்திகள் தருவீர்கள்.

      போன வாரம் திடீர் பயணம் அதனால் அவசரமாக பதிவு , ஆகவே சரி பார்த்ததில் தவறிவிட்டது.

      இந்த அவசர பயணத்தில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி தரிசனமும் , காட்டு மன்னார்கோவில் வீர நாராயண பெருமாள் தரிசனமும் கிடைத்தது சார் .

      Delete