16 July 2026

ஸ்ரீ ஜெகந்நாதரின் ரத யாத்திரை ...

  ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

இன்று -  உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ இரத யாத்திரை 16 - 7 - 2026 






ஒடிசாவில் கோயில் நகரமான பூரியில் ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை....

  வழக்கமாக 15 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ஜெகந்தாதர் தனது அண்ணன் பலராமன் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் இரத உலா வருவார்கள்.

உலகிலேயே மிகப் பழமையான இரத யாத்திரையாகக் கருதப்படும் பூரி இரத யாத்திரையானது, ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை இரண்டாம் நாள் தொடங்கி நடைபெறுக்கிறது.

 ஆலய நகரமான பூரி மட்டுமல்ல, ஒடிசாவே இரத யாத்திரையின் போது திருவிழாக் கோலம் பூணும். ஸ்ரீ ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் மூன்று இரதங்களும் அளவு மற்றும் பிற விவரங்களில் பரஸ்பரம் வேறுபட்டவை. தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகாகவும் உள்ளார்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகின்றன.

தங்கள் அத்தையின் இருப்பிடமான குண்டிச்சா ஆலயம் நோக்கிச் செல்லும் இரத யாத்திரையின்போது, மவுசிமா கோவிலில் ஸ்ரீ ஜெகன்நாதர் தங்கி ஓய்வெடுப்பார்.  அதன்பிறகு சகோதர சகோதரியின் தேர்கள் புடைசூழ ஜெகந்நாதரின் இரத யாத்திரை மீண்டும் கிளம்பி தங்கள் இருப்பிடமான ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.


பின்வரும் பதிவுகளில்  இந்த யாத்திரையின் முன், பின் நிகழ்வுகளை விரிவாக காணலாம் ..




திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி - ஏழாம் பத்து 

7- 7 திருவுக்கும் திருவாகிய

திருவழுந்தூர்  -3



 1608

திருவுக்கும் திருவாகிய செல்வா!
தெய்வத்துக்கு அரசே! செய்ய கண்ணா!,
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே!
உலகு உண்ட ஒருவா! திருமார்பா!!,
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை என்றால்,
உடன் நின்று ஐவர்  என்னுள் புகுந்து, ஒழியாது 
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!
7.1

          

 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!





தொடரும் ....


அன்புடன் 
அனுபிரேம் 💙

No comments:

Post a Comment