சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து,
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த,
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின்
அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம்.
நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடி வந்த
கோள் என் செயும், கொடும் கூற்றென் செயும், குமரேசர் இரு
தாளும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்,
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38
#கந்தர்அலங்காரம்