10 September 2015

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில்...

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில்  செப்டம்பர் -9 ஆம் தேதி -11 கோபுரங்கள் மற்றும்  43 உபசந்நிதிகளுக்கு '' மஹா சம்ப்ரோசணம் '' - நடைபெற்றது ....



பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், மிகப் புனிதமான காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் தீவுப் பகுதியில் அமைந்துள்ளது. 



 108 வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலின் 
திருப்பணி பணிகள் மிக மிக அருமையாக இருந்தன .....ஆம் தேவை இல்லாமல் இடை  காலத்தில் எழுப்பப்பட்ட சுவர்கள்  இடிக்கப்பட்டு மிகவும் பழமையான பொலிவில்  பணிகள்  இருந்தன .....












ஸ்ரீ நம்பெருமாள்  தீர்த்தவாரி  குளமான '' சந்திரபுஸ்கரணி '' தூர்வாரப்படுகிறது...







யாக சாலை ...








ஓம் நமோ நாராயணாய நமக :
ஓம்  நமோ நாராயணாய நமக :
ஓம் நமோ  நாராயணாய நமக :



இங்கு உள்ள அனைத்து படங்களும் இணையத்தில் இருந்து கிடைத்தவை பதிவு செய்த பக்தருக்கு மிகவும் நன்றி ....


போனமுறை நாங்கள் ஸ்ரீரங்கம் சென்ற போது கும்பாபிஷேகத்திற்கு  வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது.....ஆனால் அதன் பின் அந்த திட்டம் ஏதும் இல்லை ....


 ஆனால்  எதிர்பாரத விதமாக நாங்களும், அரங்கனின் அருளால் இந்த கும்பாபிஷேகத்தை காணும் பாக்கியம் பெற்றோம் ....

அங்கு சென்ற சில மணி நேரத்தில் அனைத்து சன்னதியையும் காண இயலாவிடினும், பார்த்தவரை ஆகா கண் கொள்ள காட்சியாக  இருந்தது .....

  மீண்டும் செல்ல வேண்டும் .....

நீங்களும் அந்த மகிழ்வை பெறவே இந்த பதிவு .....


பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமர ரேறே!

ஆயர்தம் கொழுந்தே! என்னும்,

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகரு ளானே!

-தொண்டரடிப்பொடியாழ்வார்

அன்புடன் 
அனுபிரேம்


நட்பு:




4 comments:

  1. நேற்று தான் அரங்கனைத் தரிசித்த அனுபவத்தை
    எழுதினேன்.
    அதுவும் ஸ்ரீரங்க எழுத்தாளர் திரு ரிஷபன் சொல்லிய மூன்று வார்த்தைகளின் உந்து தலால்.

    இன்று கண் முன்னே சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட கும்பங்களைக் கொண்டு வந்து ,
    எனக்கு, எனது வாழ்வின் மாலை நேரத்தில்,

    அரங்கனின் அருளைப் பெற்றுத் தந்து விட்டீர்கள்.

    நன்றி .

    நாராயண.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் அன்பான மொழிகளுக்கும் மிகவும் நன்றி ....

    ReplyDelete
  3. அருமையான தகவல்க்ள்...புகைப்படங்கள்...இந்தக் குளம், அந்த பெரிய ஹால் எல்லாம் பார்த்ததே இல்லை...அருமை சகோதரி!

    ReplyDelete
  4. நானும் இக்கோவில் சென்றிருக்கேன்.அழகான கோவில் . படங்கள் அழகாக இருக்கு.அந்த பக்தரின் புண்ணியத்தில் நாங்களும் தரிசித்தோம். நன்றி அனு பகிர்வுக்கு.

    ReplyDelete