ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி”
இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள்.
சிலைக்கு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார்.
திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள்.
இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
பின்பு இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை உருவாக்கினார்கள்.
இராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அளித்தார்.
இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” யின் திவ்ய தரிசனம் ..
இராமானுச நூற்றந்தாதி
43
சுரக்கும் திருவும் உணர்வும் * சொல்லப் புகில், வாயமுதம்
பரக்கும் இரு வினை பற்று அறவோடும் * படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை * இராமானுசன் என்று சொல்லுமினே.
விளக்கவுரை – எம்பெருமானார் அவதரித்ததால் புண்ணியம் செய்த இந்தப் பூமியில் வசிப்பவர்களே! இத்தனை காலமாக உலக விஷயங்கள் மட்டுமே உண்மை என்று திரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, இதே போன்ற நிலையில் இருந்து எம்பெருமானாரால் திருத்தப்பட்ட நான் உபதேசிக்க உள்ளேன்.
தர்மம் என்பது தழைப்பதையே பொறுத்துக் கொள்ள இயலாமல், தான் மட்டுமே விளங்கும்படி இருப்பது இந்த கலிகாலமாகும். இத்தகைய கலியை, அந்தக் கலிபுருஷனுடன் சேர்ந்து அதர்மங்களையும் ஓடிவிடச் செய்யும்படியான அதிசயம் ஒன்று உண்டு.
அது “இராமானுசா”, என்று எம்பெருமானாரின் திருநாமத்தைக் கூறுவதே ஆகும். எம்பெருமானின் திருநாமங்கள் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை – ஒருமுறை உடையவரின் திருநாமத்தைக் கூறினாலே போதுமானது.
இதனால் நிகழ்வது என்ன? எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யும் ஸம்பத்து, அவன் மீது பக்தி என்னும் ஸம்பத்து, பகவத்ஞானம் என்னும் ஸம்பத்து ஆகியவை உண்டாகிவிடும்.
இந்தத் திருநாமத்தைக் கூறும்போது நாக்கில் அமிர்தம் சுரந்தபடி இருக்கும். எந்தவிதமான ப்ராயச்சித்தம் செய்தாலும் நீங்காமல் உள்ள பாவங்கள், தோஷங்கள் அனைத்தும், இந்தத் திருநாமத்தைக் கூறிய உடனேயே, வேருடன் களையப்பட்டுவிடும்.
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!
அத்திருவடிகளுக்கு சரணம்..!
அன்புடன்
அனுபிரேம்💖💖
//பின்பு இராமானுசர் ஸ்ரீபெரும்பூதூர் எழுந்தருளியபோது....// - அப்படி இல்லை. திருவரங்கத்தில் அவர் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகச் செய்த திருமேனியைத் தழுவிக்கொண்டு தன் சக்தியை அதில் ஆவிர்பரித்தார். அந்தத் திருமேனிதான் ஸ்ரீபெரும்பூதூரில் எழுந்தருளப்பட்டது (தானுகந்த திருமேனி). தன் கடைசிக் காலத்தில் திருவரங்கத்தில்தான் அவர் இருந்தார். வேறு தலங்களுக்குச் செல்லவில்லை. (சரணாகதி கத்யத்திலும் இது புலப்படும். அத்ரைவ ஸ்ரீரங்கே3 ஸுக2 மாஸ் ஸ்வ )
ReplyDeleteநீங்கள் கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். அதிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆவிர்பரிப்பது - என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் காஞ்சி சங்கராச்சார்யார் (விஜயேந்திர சரஸ்வதி அவர்கள்) தன் புது சீடருக்கு அவருடைய நெஞ்சைத் தொட்டு தன்னுடைய சன்யாச பலத்தை வழங்கும்போது அவருடைய குரல் கம்மியதைக் கேட்டிருப்பீர்களே.
Deleteநன்றி சார். .. இனி கவனமாக வாசித்து பகிர்கிறேன்
Deleteதரிசித்துக் கொண்டேன். நெல்லையின் விளக்கமும் படித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Delete