02 May 2025

எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1008 ஆவது திருநட்சத்திரம்

 எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1008 ஆவது திருநட்சத்திரம் இன்று -- சித்திரை திருவாதிரை--




ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே






உபதேசரத்தினமாலை


27.   

இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்

என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்

சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்

நாற்றிசையும் கொண்டாடும் நாள்


28.   

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்

வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்

உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்

செய்ய திருவாதிரை


29.   

எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா

வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்

திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே

ஒருவாமல் எப்பொழுதும் ஓர்





இராமானுச நூற்றந்தாதி

42

ஆயிழையார் கொங்கை தங்கும் * அக்காதல் அளறு அழுந்தி

       மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று * மாமலராள்

       நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்

       தூயவன் * தீது இல் இராமானுசன் தொல் அருள் சுரந்தே.


விளக்கவுரை – தங்கள் உடலில் உள்ள குற்றம் குறைகள் தெரியாதபடி மறைத்து உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பெண்களின் ஸ்தனங்களில் எனது ஆத்மாவை ஈடுபடுத்தியபடியே இருந்தேன். 

அப்போது எம்பெருமானார் செய்தது என்னவெனில் – அனைத்து மலர்களிலும் உயர்ந்த தமர் மலரில் வாசம் செய்யும் பெரியபிராட்டியின் நாயகனாக உள்ளவனும், திருவரங்க மாநகரில் கண்வளர்பவனும் ஆகிய பெரியபெருமாளே அனைத்து உயிர்களின் எஜமானன் என்று உபதேசம் செய்தார். 

இப்படிப்பட்ட உபதேசம் செய்தவரும், தோஷங்கள் அற்றவரும், தூய்மையானவரும் ஆகிய எம்பெருமானார், இந்த உலகிற்கு வந்து அவருடைய இயல்பான கருணையை அனைவருக்கும் சுரந்தார்.


முந்தைய பதிவுகள்...

ஸ்ரீரங்கம்    ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர புறப்பாடு (2023).....









உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖

1 comment: