05 September 2016

விநாயகர்.... தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 7

அனைவருக்கும்  காலை வணக்கங்கள் ....


       
     விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன் மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ... 



      இன்றைய ஓவியத்தில் விநாயகர்  தாமரை மேல் அமர்ந்து  அருள் புரிகிறார்..
..









முந்தைய ஓவியங்கள் ...

யசோதை கண்ணன்

கண்ணன் தாமரையுடன் .....

பெருமாளும் தாயாரும்

விநாயகர்  ....

மாப்பிள்ளை கிருஷ்ணர் ...

ராதை கிருஷ்ணர்  ...



விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே ஞால முதல்வனே...!

குணநிதியே குருவே சரணம்
குணநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே...!

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேல முகத்தோனே ஞால முதல்வனே...!



பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்...!


பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார் ...!


ஆற்றங்கரை   ஓரத்திலே 
அரச மரத்தின்   நிழலிலே
வீற்றிருக்கும்   பிள்ளையார்
 வினைகள் தீர்க்கும்   பிள்ளையார்...!


மஞ்சளிலே   செய்திடினும் 
மண்ணினாலே   செய்திடினும்
ஐந்தெழுத்து   மந்திரத்தை 
நெஞ்சில்  ஆழ்த்தும்  பிள்ளையார் ...!


அவல்  பொரிகடலையும் 
அரிசி மாவு  கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் 
கஷ்டங்களை போக்குவார்...!


வன்னி மரத்தின் நிழலிலே 
வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்தின் நிழலிலே 
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்...!


கலியுகத்து விந்தைகளைக்
 காண வேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே
 இஷ்டம் போலச் சுற்றுவார் ...!


ஆறுமுக வேலனுக்கு
 அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் 
நீக்கி வைக்கும் பிள்ளையார்...!


பிள்ளையார் பிள்ளையார் 
பெருமை வாய்ந்த பிள்ளையார்...!







அன்புடன் ..

அனுபிரேம் 


1 comment:

  1. ஓவியம் அழகு.பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete