21 September 2016

இரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை

ரமண மகரிஷியின் ஆசிரமம்,திருவண்ணாமலை


போன மாதம் இரமண மகரிஷியின் ஆசிரமம்,  காணும் வாய்ப்பு கிடைத்தது.....அதை பற்றிய ஒரு சிறிய பதிவு...





இரமணரை பற்றி..



        அத்வைத வேதாந்த   நெறியை  போதித்த   இவர்  விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில்  1879 ம்  ஆண்டு டிசம்பர் 30  ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள்  ஆகியோருக்கு  மகனாகப் பிறந்தார். இவருக்கு  நாகசுவாமி  என்கிற மூத்த சகோதர் உண்டு.   இவரது இயற்பெயர்  வேங்கடராமன்.   இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.


      ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டு ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கம்  இரமணருக்கு  ஏற்பட்டது.

      அவரது 17 ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.

         இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு "ரமண மஹரிஷி" எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950   ஏப்ரல் 14 இல்...
.


     இரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்'    என்னும் ஆன்ம விசாரம்.  ஞான   மார்க்கத்தில்   தன்னை அறிதல்  அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.   உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.

         ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

      ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம். ...


ஆசிரமம் 

             இரமண மகரிஷியின் ஆசிரம நுழைவாயில் மிகவும் அழகாக அமைந்து இருக்கிறது.  ஆசிரமத்தை சுற்றி இருக்கும் இடங்களில் நிறைய மரங்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுக்கிறது. இதில் 450 வருட பழமையான மரம் ஒன்று மிக நேர்த்தியாக உள்ளது.



ஆசிரம நுழைவாயில்       




  ஆசிரமத்தின் உள்ளே...



   ரமண மகரிஷியின் சமாதி மீது அழகிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதன் மேல் ஓர் விமானம் நிறுவப்பட்டுள்ளது.

அங்கு மக்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்..









மயில்களும்  நம் முன்னே  நடமாடி ....இவ்விடத்தையே அழகாக்குகின்றன.....


நாங்கள் சென்ற போது மதிய நேரம் ...அன்னதானமாக அனைவருக்கும்  உணவு வழங்கினார்கள் ...பல  ஆதரவற்றோர்கள் வந்து  உணவை உண்டனர்....மிகவும் சிறப்பான....பாராட்டுதளுக்கு  உரிய ...அரிய சேவை...

நாங்கள் சிறிது நேரம் மட்டும் இருந்து ஆசிரமத்தை  ரசித்து  விட்டு ...புறப்பட்டோம்...


ஆனால் மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணத்துடன்...


அன்புடன்

அனுபிரேம்





8 comments:

  1. அழகான படங்கள் .
    ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாறு அருமை.
    நானும் இரண்டு மூன்று முறை அங்கு போய் இருக்கிறேன்.
    அந்த அமைதி மனதுக்கு ஆறுதல் தரும்.

    ReplyDelete
  2. படங்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete
  3. சிறப்பான இடம். ஒன்றிரண்டு முறை அங்கே சென்றிருக்கிறேன்....

    நல்ல படங்கள்.

    ReplyDelete
  4. இங்க போயி ரொம்ப நாள் ஆச்சு, முன்பு அடிக்கடி போயிருக்கேன் அனு.

    ReplyDelete
  5. அழகான இடம் சென்றிருக்கிறோம்! படங்கள் அழகு! மயில் ரொமப்வே அழகு !

    ReplyDelete
  6. ரமணாஸ்ரமம் பற்றிய பதிவு படித்தேன். 450 வருட வயதான மரமா? அதனைத் தனியாகப் படமெடுத்துப்போட்டிருக்கலாம். மற்றபடி படங்கள் அருமை. நாலு தூண்கள் மேலே விமானம் எனில் பின்னால் தெரிகிறதே கோபுரம் அது என்ன? ஏதேனும் சிறு கோவில் அங்குள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி...

      நாங்கள் சென்றது மதியநேரம் ..அப்பொழுது பொது மக்களுக்கு உணவு விநியோகம் நடைப் பெற்று ..அனைவரும் அமர்ந்து உணவருந்தினர் ..அம்மரத்தின் அடியில்...எனவே படம் எடுத்து அவர்களை சங்கட படுத்த மனம் இல்லை...எனவே அம்மரத்தை தனியாக படம் எடுக்கவில்லை..

      Delete
    2. முன்னால் இருப்பது சிறு கோபுரம்..பின்னால் தெரிவது தான் விமானம்..அது உயரத்தில் இருப்பதால் வேறு கோவில் போல் உள்ளது...

      Delete