06 March 2017

பெண்மை

பெண்மை ....


பாரதியின் வரிகள் ....





பெண்மை    வாழ்கென்று   கூத்திடு   வோமடா!
பெண்மை   வெல்கென்று   கூத்திடு   வோமடா!
தண்மை      இன்பம்நற்   புண்ணியஞ்  சேர்ந்தன
தாயின்   பெயரும்   சதியென்ற  நாமமும்





அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்



வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்



பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா



சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்



உயிரைக் காக்கும், உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே



'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே



'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்'என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே


அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்




எவ்விடத்திலும் பெண்மையை பற்றியே பேச்சு இங்கு...இந்த மாதம்  மட்டும் நினைவு கொள்வதால் என்ன பயன் என அறியேன்...


நம்மை   நாமே     போற்ற  வேண்டும்...

நம்மை   நாமே     மதிக்க   வேண்டும்...

நம்மை   நாமே    பேண   வேண்டும்....

நம்மை   நாமே    உயற்ற   வேண்டும்....

நம்மை   நாமே    முதலில்....

                         மகிழ்விக்க  வேண்டும்...


அனைத்து செயல்களையும்  முதலில் நம்மில்

                        ஆரம்பித்தால்....பின்

அனைவரும் தொடர்வர்....  பின்பற்றுவர்...

                           எனவே

நம்மை   நாமே  முதலில்    போற்ற  வேண்டும்...



அன்புடன்

அனுபிரேம்...



7 comments:

  1. //எவ்விடத்திலும் பெண்மையை பற்றியே பேச்சு இங்கு...இந்த மாதம் மட்டும் நினைவு கொள்வதால் என்ன பயன் என அறியேன்...//
    அதேதான் எனது கருத்தும் ஒரு நாள் ஒரு மாதம் மட்டுமே நினைவு கூறுவதில் பயனில்லையே ..
    பெண்மையை மிதிக்காமல் எந்நாளும் மதிக்கும் சூழல் வரட்டும் அதுதான் பொன்நாள் ..நாமே சந்தோஷத்தை பரப்புவோம் நம்மிலிருந்து பரவட்டும்



    ReplyDelete
  2. நம்மை நாமே முதலில் போற்ற வேண்டும்...//
    நன்றாக சொன்னீர்கள் !
    நம்மை நாமே போற்றுவோம்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. உண்மை
    பெண்மை போற்றுவோம்

    ReplyDelete
  4. பெண்மை வாழ்க.. என்றென்றும் வாழ்க!..

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு அனு சகோ/அனு! தாம்தமாகிவிட்டது! இணையப் பிரச்சனையால்

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete