30 November 2016

ஆரோவில் 2 (Auroville ) --- புதுச்சேரி

அனைவருக்கும் வணக்கம்...


இதுவரை  புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... என  இதுவரை ரசித்தோம்,..

இன்றும் ஆரோவில் (Auroville ) பற்றிய பதிவே....




ஆரோவில்  தோன்ற காரணமான    ஸ்ரீஅரவிந்த அன்னையை பற்றி.....


அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும்   "" மிர்ரா அல்ஃபாஸா "  பாரீஸ் நகரில் 1878 ஆண்டு, பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாள்  அவதாரம்  செய்தவர்.     சிறு வயதிலேயே படிப்பிலும், ஒவியங்கள் வரைவதிலும், பியானோ வாசிப்பதிலும் தேர்ச்சி
பெற்றிருந்த மிர்ரா மற்ற குழந்தைகளிடமிருந்து வேறு பட்டு விளங்கினார்,   அறியாப்பருவத்திலேயே  ஆன்மீகம் அவரை ஆட்கொண்டது.  நான்கு வயதிலேயே தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து     தியான நிலையில் மூழ்கத் தொடங்கினார்..  ஆன்மீக ஒளி, வெள்ளம்   போல்   பெருகி   அவருள்   பாய்ந்து  பரவசப்படுத்தியது.   12 வயது இருக்கும் போது பல இரவுகள்,  தன் உடலை விட்டு வரும்  அனுபவத்தை உணர்ந்தார். 


   பின்னர் சித்து வேலைகளில் நாட்டம் ஏற்பட்டதால் அல்ஜீரிய நாட்டுக்குச் சென்று அங்கு மாகஸ் தியான் மற்றும் அவர் மனைவி அல்மா தியான் ஆகியோரிடம் பல சித்து ஞானங்களைக் கற்றார்.


   விவேகானந்தரின் "ராஜயோகம்" நூல் அன்னையின் ஆன்மீகவளர்ச்சிக்குத் துணை புரிந்தது...


    19 -வது வயதில் மிர்ராவிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.  திருமணத்தில்  நாட்டம்    இல்லாத  அன்னைக்கு இதுவும் ஒரு உதவியாக  அமைந்தது, தொழில்  முறையாக பாண்டிச்சேரி வந்த அவரது  கணவர் பால் ரிச்சர்ட், இந்தியாவின் பெருமைகளையும்   அரவிந்தரைப்   பற்றியும்    அறிந்து நாடு திரும்பியதும்   அவற்றை   அன்னைக்கு   எடுத்துரைத்தார்.


   தன்  கணவருடன்  1914 ஆம்   ஆண்டு   புதுவை   வந்த  அன்னை அரவிந்தரைச் சந்தித்தார். தன்னை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தும்   ஞானியாக, தன் உள்ளூணர்வில் கண்ட கிருஷ்ணனாக, ஆத்ம அனுபவத்தின் அளப்பரிய   சக்தியாக அரவிந்தரை அன்னை உணர்ந்தார்.


 முதலாம் உலகப் போர் ஆரம்பித்த போது மிர்ரா தாயகம் திரும்பினார். அங்கிருந்து ஜப்பான் முதலிய நாடுகளுக்கு
 அவர் சென்று வந்தார், ஆனாலும் அவர் மனம் இந்திய மண்ணிலேயே குடி கொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப்
பின்னர் 1920-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு திரும்பிய அன்னை, தான் தன் பூத உடல் நீத்த தருணம் வரை அங்கேயே
தங்கிவிட்டார்.


1956 ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் உருவான போது அதன் உடலும், உயிருமாக அன்னை  விளங்கினார். அன்பும், அருள், ஆனந்தம், அமைதி  என  ஆன்மீக  ஒளி  பரப்பிய  ஆசிரமம்  அன்னையின் அருளால் உன்னதமான   நிலையை  அடைந்தது. 1952 ஆம் ஆண்டு அரவிந்தர் உலக கல்வி மையமும் 1964 ஆம் ஆண்டு ஆரோவில் என்னும்   உலக சமாதான நகரமும்  பாண்டிசேரியில்  அன்னையின் முயற்சியால்   உன்னதமான  நிலையை   அடைந்தது.


 சுமார் 50 ஆண்டுகள் அன்னையின் அன்பும் அருளாட்சியும் மக்களுக்குக் கிட்டியது. 95 வயது வரை மக்களுக்கு  அன்பையும் அருளையும் வழங்குவது மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்த அன்னை 1973 ஆம் ஆண்டு  நவம்பர் 17-ம் நாள் தன் பூத உடலைத் துறந்தார். இலட்சக்கணக்கான் அன்பர்கள் இன்றும் நாள்தோறும் அவரது  பூத உடல் அமைந்த சமாதியில் தியானத்தில் அமர்ந்து அமைதியையும், ஆனந்தத்தையும் அடைகிறார்கள்...,






ஆரோவில்   உள்ள பெரிய ஆலமரம்...











 மாத்ரிமந்திர் காண்பதற்கு  முதலில் அனுமதி  சீட்டுகள்  பெறவேண்டும்.... ஒரு  அறிமுக வீடியோவை  பார்த்த பிறகு, ஆரோவில் பார்வையாளர்கள் 'மையத்தில் அந்த சீட்டை  இலவசமாக பெறலாம்.

பார்வை நேரம்..

 திங்கள்  - சனிக்கிழமை  ..

காலை 9 -  1:00 மணி மற்றும் 1.30 - மாலை 4.30 மணி

ஞாயிறு - காலை 9.30 மணி 1 மணி வரை மட்டுமே,


இந்த மைய பகுதியில்   அமர்ந்து தியானம் செய்ய
 வேண்டுமானால்... அதற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்...

மிகவும்   அழகான இடம்....பராமரிப்பு மிகவும் அருமை...



தொடரும்


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்
அனுபிரேம்




3 comments:

  1. நாங்கள் அரவிந்தர் மன்றத்தில் முன்பே பதிவு செய்து போனதால் உள்ளே அமர்ந்து ஐந்து நிமிடம் தியானம் செய்தோம். எங்களை அழைத்து சென்ற அன்பர் ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்பவர் . அவர் மூலம் ஆசிரமத்தில் தங்கி மாலை அன்னை சாமதி அருகில் நடைபெறும் தியானத்தில் கலந்து கொண்டோம், அரவிந்தர், அன்னை அறைகள், தியானம் செய்த இடம் எல்லாம் பார்த்தோம்.

    மறுநாள் ஆரோவில் போனோம். ஆரோவில் இருக்கும் இடத்தில் முதன் முதலில் மின்சாரம் எடுக்க தகடுகள் பொருத்தி இருந்ததைப் பார்த்தோம். அவர்களே தயார் செய்யும் அதர்பத்தி , படங்கள் எல்லாம் வாங்கி வந்தோம்.

    ReplyDelete
  2. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    அன்னை ஆஷ்ரமம் சில முறை சென்றதுண்டு.

    ReplyDelete
  3. சென்றதுண்டு அனு...புதுச்சேரியில் மகனிற்காக 5 வருடங்கள் இருந்தமையால்..அருமையான இடம். செல்லும் வழியும் அந்த ரோடு முழுவதும் இருண்ட காடுகள்தான் இடையே சிறிய கிராமங்கள் உண்டு என்றாலும் ஒரு பகுதி காடுகள் மட்டுமே....நல்ல தகவல்கள் அனு

    கீதா

    ReplyDelete