31 August 2017

உயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா

வணக்கம் நட்புகளே...

வாழ்க நலம்....



இன்றைய புத்தக அலமாரியில் அடுக்கும் நூல்...

உயிரோவியம் உனக்காகத்தான்......இதன் ஆசிரியர் ஹமீதா....            அவரின் தளம்...

பொதுவாக இங்கு நான் பகிர்வது நூல் விமர்சனம் இல்லை...எனது வாசிப்பின் அனுபவம் என்பது உங்களுக்கு தெரியும்....

இந்த நூலின் வாசிப்பு அனுபவம் என்பது....

கண்ணில் கண்ணீர் கர கர வென்று ..வழிய வழிய படித்த நாவல்....


ஆம்...

கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...சரி இத்தனை உணர்வு பூர்வமாக படிக்காமல் பிறகு படிக்கலாம் என்ற எண்ணமும் வரவில்லை...

கண்ணீர் ஒருபுறம்...நாவல் ஒருபுறம் என்று மிக வேகமாக படித்த ஒரு மனத்திற்கு பிடித்த நாவல்...

சில நாட்களாக படித்த நாவல்கள் எதுவும் மனத்தில் பதியாமல் சென்றது..... ...

திடீரென்று உயிரோவியம் உனக்காகத்தான் நாவல் கிடைக்க பெரும்  எதிர்ப்பார்ப்பு  எதுவும்   இல்லாமல்  தான் படிக்க ஆரம்பித்தேன்...










ஆசிரியர் ஹமீதா என படித்தாலும்...பெரும் சிந்தனை வரவில்லை....ஆனால் நாவல் படித்து முடிக்கவும்  தான்...   நமக்கு தெரிந்த  ஆசிரியர்  ஹமீதா அவர்களின் நாவலா  என தேடி... பின்  கண்டுப்பிடித்தேன்...  மிக மகிழ்ச்சி....

மிக அற்புதமான ஒரு நாவலை படைத்து ...நம் மனதில் நிற்கிறார் ஹமீதா....



நாயகி... சாரா ஃபாத்திமா (அரபு தேசத்து இளவரசி போன்ற தோற்றம்)

சாரா....எத்துணை எதார்த்தமான ..அழுத்தமான பாத்திர படைப்பு....

கொண்டாடப்பட வேண்டியவள்...



நாயகன்.. தன்வீர் அஹமத்

அனைவரும் வாழ விரும்பும் வாழ்க்கையை சரியான நோக்கோடு...அன்பாய் ...இயல்பாய்   வாழ்பவன்...



ஷீரினின் நட்பு...மிக விசாலமானது....தோழியை பற்றி ஏதும் ஆராயாமல் அவளை அவளுக்காகவே ஏற்று கொள்ளும்  ஆத்மார்த்தமான நட்பு...



நாயகி கருவாக உருவாகும் போதே அவளின் தந்தை மரிக்க....தாயின் வெறுப்போடு பிறந்து....கடினமான வாழ்க்கை சாரவினது...

ஆனால் அந்த கடின வாழ்வையும் மணம் வீச செய்தவர்கள்...சாராவின் நானாவும் ..நானியும்...

அவளின் கடின வாழ்வை இலகுவாக்க சாராவிற்கு...தைரியத்தையும்....தன்னம்பிக்கையும் ...அனைத்திற்கும் மேலாக நல் கல்வியும் கொடுத்தனர்..

ஆம்.... வியக்க வைக்கும் அளவில் அவர்களின் பாத்திரபடைப்பு.... நம் அருகில் உள்ள உயர்சிந்தனை கொண்ட தாத்தா ..பாட்டியை உணர வைக்கிறார்...


சிறு வயதில் கணவனை இழந்த மகளுக்கு மறு மணம்.....மகளுக்கு பிடிக்காத ...மகளின்  மகள் வாழ்வுக்காக செய்யும் முயற்சிகள் என அத்துனையும் அருமை...



அடுத்து ...படித்து வியந்த கதை மாந்தர்...
அர்ஷியா..தன்வீரின் தாய்...நல் கல்வி பெற்றவர்....ஆனாலும் அக்கல்வினால்  எங்கே அவர் தன்னை மதிக்க மாட்டாரோ என எப்பொழுதும் சிறிது கோடு வைத்து நடக்கும் தன்வீரின் தந்தை....

அதனால் தான் பாதிக்கப் பட்டாலும்....தன் மக்களை மிகவும் குணசாலியாக ...அனைவரையும் புரிந்து ...அன்போடு நடக்கும் மக்களாக வளர்கிறார்....

தன்வீர்....தந்தைக்கு பிடிக்க வில்லை என்பதால் சற்று நிதானித்து....பொறுமையாக ...காதலித்தவளையே கைபிடிக்கிறான்...

சாராவின் தாய்...ஹசினா....சாராவை காணும் போதெல்லாம் கணவரின் நினைவுகள் வருவதால்..சாராவின் மீது அதித கோபம்...

 இரண்டாம் முறை மணம் முடிக்கும் போது உடன் வரும்   கணவரின் குழந்தையின் மீது கூட அன்பாய் இருபவரால் ...சாராவிடம் அன்பாக இருக்க முடியவில்லை.....


இத்தகைய பல பல பாத்திரப் படைப்புகளோடு  ஒரு அருமையான நாவல்...

மேலும் இதில் என்னை கவர்ந்தது...அங்கு அங்கு ஆசிரியர் சொல்லி செல்லும் ....  இஸ்லாமிய  மார்க்க  இறை கருத்துக்கள்..மிக அழகு....ஆம் ..இதுவரை இவ்வாறு படித்தது இல்லை...


இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் தான்....ஏழை. , படித்தவன், பணக்காரன், படிக்காதவன் எல்லாரும் ஒன்னு தான்......

இறைவனை தவிர யாரிடமும் தலை குனிய கூடாது என்ற வைராக்கியம் கொண்டவள்...

இவ்வாறு பல....



நாவல் வாசித்து முடித்தும் பல நாள்கள் அதன் தாக்கம் மனதில்......



இத்தகைய அருமையான நாவலுக்கு மிகவும் நன்றி....ஹமீதா


அன்புடன்
அனுபிரேம்...




11 comments:

  1. உயிரோவியம் பற்றி அறியத் தந்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. கதை அனுபவம் அருமை. பாரதி கவிதை அருமை.

    ReplyDelete
  3. விமர்சனம் நன்று ஆவலைத் தூண்டுகிறது ஆசிரியர் ஹமீதா அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்
    நன்றிசகோதரியாரே

    ReplyDelete
  5. விமர்சனம் வெகு அழகு! சாதாரணமாக நூலகங்களில் கிடைக்கும்தானே?

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தகம்...புத்தக கண்காட்சில் கிடைக்கிறது...நூல் நிலையங்களில் கிடைக்குமா என தெரியவில்லை...

      Delete
  6. சில கதைகள்.. என்றென்றும் மனதை விட்டு நீங்காதவை.. என் மனதிலும் அப்படி சில கதைகள் உண்டு.

    அருமையாக சொல்லியிருக்கிறீங்க கதையை.. கிடைத்தால் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. பாரதியார் சொல்வது, நாம் எல்லோரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதே...

    ReplyDelete
  8. நல்லதோர் அறிமுகம்!! தெரிந்து கொண்டோம்! அழகான வரிகள்!

    கீதா: கவர் பிச்சர் சூப்பர்!! அனு!

    ReplyDelete
  9. வணக்கம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று தான் எனது ப்ளாகில் லாகின் செய்தேன். தாங்கள் அளித்திருந்த இணைப்பு வாயிலாக என்னுடைய மூன்றாவது கதைக்கான தங்களுடைய அனுபவத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. கதையும் கதை மாந்தர்களும் அவர்தம் உணர்வுகளும் உங்களைக் கவர்ந்ததில் அதை விடவும் மகிழ்ச்சி. நீங்கள் உணர்ந்ததை மிக அழகான சொல்லாடல்கள் மூலமாக இயல்பாக தொகுத்து அளித்துள்ளீர்கள். இதயம் நிறைந்த நன்றிகள் அனுராதா பிரேம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ..மகிழ்வான ....கருத்துகளுக்கும் நன்றி ஹமீதா...

      Delete