19 May 2023

ஶ்ரீரெங்கநாச்சியார் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)

 ஶ்ரீரெங்கநாச்சியார்  தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)...

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாள், தாயாரைக் குளிர்விக்க `பூச்சாற்றி விழா’ நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கும் அதன்பிறகு ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் இந்த உற்சவம் தலா பத்து நாள்கள் நடைபெறும். 

அதன்படி ரங்கநாதருக்குக் கோடை விழா முடிவடைந்து,  நாச்சியாருக்கு விழா தொடங்கியது. முதல் 5 நாட்கள் `வெளிக் கோடை விழா’வும், பின் 5 நாட்கள் `உள் கோடை விழா’ எனும் பூச்சாற்றி விழா நடைபெறும். இந்த ஆண்டு மே மாதம்  10 தேதி தொடங்கி இன்று வரை இவ்விழா நடைபெறுகிறது. இதில் போன வெள்ளிக்கிழமை நேரில் கண்டு மகிழும் பேறு  கிடைத்தது. அதிலும் அன்று வெள்ளிக்கிழமை நல்ல கூட்டம்  இருந்தாலும் தாயாரை கண் குளிர அருகில் நின்று காணும் பாக்கியம் கிட்டியது. 

ஶ்ரீரங்கநாயகி தாயார் பூச்சாற்று புறப்பாடு


04 May 2023

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

 மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........