மேல்கோட்டையில் தமர் உகந்த திருமேனி
![]() |
சுவாமி இராமானுசர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார்.
அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார்.பின் தம் திவ்ய சக்தியை அந்த அர்ச்சாவிக்ரகத்தில் ஆவிர்ப்பவிக்க செய்தார்.
இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது.
விடைபெறும் போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார்.
இந்தச் சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது.
இன்று மேல்கோட்டை தமர் உகந்த திருமேனியின் திவ்ய தரிசனம் ..
இராமானுச நூற்றந்தாதி
41
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணருஞானம் தலைக் கொண்டு * நாரணற்கு ஆயினரே.
மாறிமாறிப் பல பிறவிகள் எடுக்கும் மனிதர்கள் போன்று மனிதன், விலங்கு என்ற பல ரூபங்களில் இராமனாகவும், கண்ணனாகவும் எம்பெருமான் அவதரித்தான். “அகலகில்லேன் இறையும்” எனத் தன்னைவிட்டுப் பிரியாத பெரியபிராட்டியுடயவன் எப்போதும், எங்கும், அனைவரின் கண்களில் புலப்படும்படி நின்றாலும் – இந்த உலக மக்கள் செய்வது என்ன?
இவனே நமக்கு ஏற்ற எஜமானன் என்று அறியாமல் உள்ளனர், அறியாமல் இருந்தனர்.
ஆனால் இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக, பரமபதத்தில் இருந்து, நம் மீது கொண்ட கருணை காரணமாக, இந்தப் பூமியில் எம்பெருமானார் திருஅவதாரம் செய்தார்.
இதனால் நிகழ்ந்தது என்ன? இந்த உலகில் உள்ள மக்கள் பலரும், தங்களில் இயல்பான ஞானம் பெற்று, அனைவருக்கும் பந்துவாக உள்ளவனும், அனைவரின் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைகள் ஆனார்கள்.
அன்புடன்
அனுபிரேம்💖💖
உகந்த திருமேனி தரிசனம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. படங்களும் அருமை. இறைவனின் அன்பிற்குகந்த ஸ்ரீஇராமனுஜரின் சரிதை அற்புதம். மேல்கோட்டை தரிசனம் கிடைத்தது. மேல்கோட்டை தமருகந்த திருமேனி பற்றி அறிந்து கொண்டேன். உடையவர் திருவடிகளை வணங்கி போற்றுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா
Delete