ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் ஆயிரமாவது ஆண்டு விழா
திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்
இன்று 31/ 01 /2026 , தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 1000 ஆவது திருநட்சித்திரம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் ஆயிரமாவது ஆண்டு விழா
திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்
இன்று 31/ 01 /2026 , தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 1000 ஆவது திருநட்சித்திரம்.
மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️
இராஜமன்னார்குடி ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷண நேற்று நடைப் பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இன்று ..
திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026 (132ஆம் ஆண்டு)
தை அமாவாசை (18/01/2026) தொடங்கி 3 நாட்கள் திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்-12 கி.மீ) 11 எம்பெருமான் களின் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.
திருமங்கை ஆழ்வாரே இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம். இந்த உற்சவத்தைப் பற்றிய விவரங்களை இந்தத் தொடரில் அனுபவிப்போம்.
முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள்.
அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள்.
![]() |
![]() |
இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.
இருபத்தாறாம் பாசுரம் - இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள்.
முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள்.
நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.
இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ரிஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.
இருபத்துமூன்றாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்க வைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.
இருபதாம் பாசுரம் - இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.
பதினெட்டாம் பாசுரம் - எப்படி எழுப்பியும் எம்பெருமான் எழுந்திருக்காமல் இருக்க, நப்பின்னைப் பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு எழுப்பினால், கண்ணன் எம்பெருமானை எழுப்பலாம் என்றெண்ணி அவ்வாறே செய்கிறாள்.