11 January 2026

திருப்பாவை 28

  இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.




  திருப்பாவை 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

     அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்

     குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

     இறைவா!  நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்


ஒருவிதமான தோஷமும் இல்லாத கோவிந்தா! 

நாங்கள் பசுக்களின் பின்னே சென்று காட்டை அடைந்து உண்டு திரிவோம். 

சிறிதும் ஞானம் இல்லாத இடையர் குலத்தில் நீ வந்து பிறக்கும்படியான புண்ணியத்தை உடையவர்களாய் இருக்கிறோம்.

 இறைவா! உன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவானது உன்னாலும் எங்காளாலும் ஒழிக்கமுடியாதது.

ஒன்றும் அறியாத சிறுபெண்களான நாங்கள் உன் மீதுள்ள அன்பினாலே உன்னைச் சிறு பெயரைச் சொல்லி அழைத்ததைக் குறித்து எங்களிடத்தில் கோபிக்காமல், நாங்கள் விரும்பும் பலனைக் கொடுத்தருள வேண்டும்.


ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசாயி ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் 






மார்கழி மாதம்  28 ஆம் நாள் பரமபத நாதர் சந்நிதியில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , 
உற்சவர் - வசுதேவனுடன் வனபோஜனம் திருக்கோலத்தில் 















ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺




No comments:

Post a Comment