வாழ்க வளமுடன்..
முந்தைய பதிவுகள்..
1.. கன்னியாகுமரியில்...
2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி
3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)
4.காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)
திரிவேணி சங்கமம்
முக்கடல் சங்கமம் - வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம்.
இங்கு சிறிதாக ஒரு சிவலிங்கம் உள்ளது..
நீராடல் முடித்து ..
மக்கள் அந்த லிங்கத்திற்கு பால் ஊற்றி பூஜை செய்கிறார்கள்.
நாங்கள் சென்றது சாதாரண நாள் என்பதால் இங்கு நீராடல் இடத்தில் அத்தகு மக்கள் கூட்டம் இல்லை..
விசேச நாட்களில் இங்கு மக்கள் அதிகம் கூடுவார்கலாம்...
தொடரும்..
அன்புடன்
அனுபிரேம்..
அழகிய படங்கள். 80 களின் முற்பகுதியில் நண்பனின் திருமணத்துக்குச் சென்றபோது பார்த்த இடங்கள்.
ReplyDeleteஆ! ஸ்ரீராம் அப்போ நாகர்கோவில் வந்தீங்களா? சொல்லவே இல்லை?!!! நான் உங்களைப் பார்க்கவே இல்லையே!! ஹா ஹா ஹா ஹா....நான் பி ஏ படித்த சமயமாக இருக்கும்!!
Deleteகீதா
படங்கள் அருமை. நானும் போகனும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். காலம்தான் கனியனும்
ReplyDeleteசிக்கீரம் போயிட்டு வாங்க ராஜி க்கா
Deleteஇங்கு சிறிதாக ஒரு சிவலிங்கம் உள்ளது..
ReplyDeleteநீராடல் முடித்து ..
மக்கள் அந்த லிங்கத்திற்கு பால் ஊற்றி பூஜை செய்கிறார்கள்.//
இதென்ன புதுசா இருக்கு அனு. நான் அங்க இருந்த வரைல எவ்வளவு தடவ போயிருக்கேன். இப்படி எல்லாம் யாரும் செஞ்சதில்லையே. இந்த ஒரு இடத்திலதான் குளிக்க விடுவாங்க. கடல் அலைல இறங்கவும் விடுவாங்க. வேற இடத்துல எல்லாம் மக்கள் போனாங்கனா அது காவல் மீறி போறதுதான். இங்கயே சில சமயம் விட மாட்டாங்க. ஆனா இது ஒன்னுதான் அலவ்ட். அந்த நீலக்கலர் பில்டிங்க் இருக்கல அது ஹோட்டலோ? இப்ப இது புதுகா இருக்கு. முன்னாடி சின்னதா உருண்டையா ஒரு ஹோட்டல் ரவுண்டா தூரத்துலருந்து பாத்தா உருண்டையா இருக்கும். தொடங்கப் போறதா வைச்சுருந்தாங்க அலை வந்து அடிக்கும்....என் தோழி அவ அண்ணண் அண்ணி குழந்தையோடு அந்தப் பாறைல உக்கர்ந்திருந்த போது அலை அடித்து அவள், அவள் அண்ணி எல்லோரும் இறந்து போனார்கள். அண்ணன் பிழைத்தார் என்று கேள்வி. என்னைவிட இருவருடம் சீனியர். அப்போது அத்தனை ஷாக்காக இருந்தது எனக்கு...அதனால் அங்கு எல்லாம் செல்ல அனுமதி இல்லை அப்புறம்...
படங்கள் எல்லாம் மிக மிக அழகு. உங்கள் மொபைல்/கேமரா மிக நன்றாக எடுக்கிறார்!! எனது கேமரா டவுன். மொபைல் அத்தனைச் சிறப்பாக எடுப்பதில்லை.
வெகு அழகு படங்கள். அந்த மணல் உங்கள் கால் படம் ரொம்ப அழகு. செமையா இருக்கு படங்கள்
கீதா
ஆமாக்கா
Deleteஅந்த லிங்கம் எப்ப வச்சாங்க ன்னு தெரில..ஆனா வட இந்திய மக்கள் தான் பூஜை பண்ணாங்க...
இங்க தான் குளிக்க கொஞ்சம் பரவாயில்ல மா இருந்தது..பசங்க மட்டும் இறங்கி விளையாண்டங்க...
அந்த நீல கலர் பில்டிங் view பாயிண்ட் கா ..அங்க ஏறி full view பார்க்கலாமா..நாங்க தூரமா நின்னே பார்த்தாச்சு...அந்த பில்டிங்க்கையும்..
அசோ...ஆமா க்கா திடீர் ன்னு தண்ணி வேகமா எல்லாம் வருது..அப்போ யாரும் அங்க பறையில் எல்லாம் உட்காரல..
நன்றி கா ..படங்கள் எல்லாமே phone வழி தான்...கடைசி படம் எனக்கும் பிடித்ததால் தான் இங்கு பகிர்ந்தேன்
பார்க்கவேண்டிய இடம். நாங்கள் பல முறை சென்றுள்ளோம்.
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteபல வருடங்க்களுக்கு முன் பார்த்தோம்.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கிறது அனு.
நன்றி மா...
Deleteமிக அருமை, ஆனா எப்படி இதுக்குள் இறங்குவது? அலையாக இருக்குதே... எங்கள் கீரிமலைக் கடற்கரைபோலவே இருக்குது பார்க்க.
ReplyDeleteஇங்க கடலில் இறங்க கஷ்டம் தான் அதிரா ..எல்லா இடமும் பாறையாய் இருக்கு.....ஆன இருக்குற கேப் ல மக்கள் இறங்கி விளையாடுராங்க
Deleteதிரிவேணி சங்கமத்தில நானும் குளித்தேன். ஆனா அப்போ நிறைய கூட்டம். பக்கத்தில சின்ன சின்ன கட்டிடமா இருந்தது.அறைகள் போல. இப்ப இருக்குதா. விவேகானந்தர் நினைவு மண்டபம், வள்ளுவர் சிலை பார்த்தோம். பார்த்த இடங்களில் குமரியும் பிடித்தமான இடம்.
ReplyDelete