14 April 2026

பராபவ ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு -வாழ்த்துகள் !!

                       பராபவ ஆண்டு தமிழ்ப்  புத்தாண்டு -வாழ்த்துகள் !!


நம்பெருமாள் சித்திரை முதல் நாள் ஆஸ்தான மண்டப சேவை




இன்று(14/04/26) பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு.

"பராபவ " (Paraabhava) என்றால் தமிழில் --வெளிப்புற சக்திகள்/மற்றவர்களால் ஏற்படும் பிர்ச்சினைகள்/விளைவுகள் எனப் பொருள்படும்.

பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் பராபவ விளைவுகள் நம்மைப் பெரிதும் பாதிக்காது ! 


பராபவ ஆண்டு வெண்பா !

பராபவ  ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பா:

"மிக்க பராபவத்தின் மேதினியிற் பின்மழையாம்

தக்க பசுக்கடழைக்குமே - இக்குப்

பலிக்காது நான்கு வகைப் பல்லுயிர்க்கும் இன்பம்

கலிக்காதனவே கருது"

இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில்,பருவமழை சற்றுத் தாமதமாகவோ அல்லது குறைவாகவோ பொழியும். இருப்பினும்,கால்நடைகள் செழிக்கும்;பால் வளம் பெருகும். பசி மற்றும் வறுமை நீங்கி, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்

அனைவரும் பராபவ ஆண்டில்  "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ" பிரார்த்திப்போம். 


காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் 




2087 

ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 
இன்று மறப்பனோ ஏழைகாள்* - அன்று-
கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை.


2260

பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-
முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  - சொல் நின்ற-
தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-
நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   


2411

அவன் என்னை ஆளி*  அரங்கத்து அரங்கில்* 
அவன் என்னை எய்தாமல் காப்பான்*  அவன் என்னது
உள்ளத்து*  நின்றான், இருந்தான் கிடக்குமே* 
வெள்ளத்து அரவுஅணையின் மேல்.   


 ஸ்ரீ நம்பெருமாள் ஶ்ரீ ரங்கநாயகித் தாயார்
  திருவடிகளே சரணம் !!



அன்புடன்
அனுபிரேம் 💕💕💕💕💛


No comments:

Post a Comment