வாழ்க வளமுடன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (16.8.18) அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் இந்த ஸம்ப்ரோக்ஷணம் இன்று திருமலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது...
அதன் சிறப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு...
(680)
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே
(683)
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே
(684)
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
(686)
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே
ஓம் நமோ நாராயணா !
வேங்கடவா திருவடிகளே சரணம் !
முக நூலில் பகிர்ந்த பக்தர்களுக்கு நன்றிகள் பல
அன்புடன்
அனுபிரேம்
அருமையான பதிவு.
ReplyDeleteஓம் நமோ நாராயணா !
வேங்கடவா திருவடிகளே சரணம் !
படங்கள் மிக அழகு.
கோவிந்த சரணம்.. சரணம்.. சரணம்..
ReplyDeleteபதிவின்வழி கும்பாபிஷேகம் கண்டேன். மன நிறைவாக இருந்தது.
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDeleteஎனக்கும் இந்தப் படங்கள் வாட்ஸப்பில் வந்தன.
இங்கேயும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.
நேரில் பார்ப்பது போல சிறப்பான படங்கள்.
ReplyDeleteநானும் இதையேதான் விவரங்களுடன் பதிவிட்டிருக்கேன். கும்பாபிஷேக காணொளியும் இணைச்சிருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருப்ப்பா
ReplyDeleteகண்டிப்பா கா..பார்கிறேன்
Deleteபார்க்கக் கிடைக்காத படங்கள், நானும் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.
ReplyDelete