28 August 2018

பூப்பூக்கும் ஓசை..



வாழ்க வளமுடன்










பெங்களுரு cuppon park ல் எடுத்த படங்கள்...பாடல் வரிகளுடன்




 பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை

புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்

சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே

காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி

நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே

பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே

கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி

(பூப்பூக்கும் ஓசை)





கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்

கடிகாரச் சத்தம் சங்கீதம்

கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்

ரயில் போகும் ஓசை சங்கீதம்

பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)

சந்தோஷ சங்கீதம்

தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி

பாலுண்ணும் சத்தம் சங்கீதம்








ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே

பங்கலாரே கொரே கொரே பைய்யா

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே

 ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)






சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி

சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்

கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து

கைதட்டும் ஓசை சங்கீதம்

காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)

சிருங்கார சங்கீதம்

முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்

தவளைக்கள் ஓசை சங்கீதம்










ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே

பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே

ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)





அன்புடன்
அனுபிரேம்


7 comments:

  1. பாடலும், பூக்களின் படமும் அருமை.

    ReplyDelete
  2. அழகான பூக்கள். படம் எடுத்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. //பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை// Wow!

    ReplyDelete
  4. பூக்களின் படங்கள் அழகு.

    ReplyDelete
  5. அழகிய படங்கள். கப்பன் பார்க்கில் இதே வகைப் பூக்களைப் படமாக்கியது நினைவுக்கு வந்தது. பொருத்தமான பாடல் வரிகள்.

    ReplyDelete
  6. வெகு அழகான படங்கள்...எனக்கு மிகப் பிடித்த பாடல் வரிகளுடன்!! அருமை! :)

    ReplyDelete