15 August 2018

எங்கள் நாடு

 பாரத நாடு

எங்கள் நாடு

பாரதியாரின் வரிகளில்..



மன்னும் இமய மலையெங்கள் மலையே 

      மாநில மீதது போற்பிறி திலையே! 

இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே 

      இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? 

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே 

      பார்மிசை யேதொரு நூல்இது போலே? 

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

      போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1






மாரத வீரர் மலிந்தநன் னாடு 

      மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு

நாரத கான நலந்திகழ் நாடு 

      நல்லன யாவையும் நாடுறு நாடு 

பூரண ஞானம் பொலிந்தநன் னாடு 

      புத்தர் பிரானருள் பொங்கிய நாடு 

பாரத நாடு பழம்பெரு நாடே 

      பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2




இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் 

      ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம் 

தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்

      தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் 

கன்னலும் தேனும் கனியும்இன் பாலும் 

      கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும் 

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே 

      ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே




இத்தகு  பெருமைமிகு என் நாட்டிக்கு

 எனது வணக்கங்களும்






எனது கைவண்ணத்தில் உருவான வாழ்த்து அட்டை











அன்புடன்
அனுபிரேம்





4 comments:

  1. பாரதி பாடல் சிறப்பு.

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சுதந்திர தின வாழ்த்துகள். உங்கள் கைவண்ணம் சிறப்பு.

    ReplyDelete
  3. பாரதியார் பாடலும், நீங்களே செய்த வாழ்த்து அட்டையும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்து மடல் அருமை.
    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..

    ReplyDelete