வாழ்க நலம்...
இன்றைக்கு மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...
ஆகவே கவியின் நினைவுகள் சில..
புதுவை வாசத்தின் போது ,
பாரதியார் குவளைக்கண்ணன் போன்ற நண்பர்களுடன் வெல்லச்சுச் செட்டியார் என்று அழைக்கப்பட்ட பாரதியாரின் நண்பருடைய மாந்தோப்புக்குச் சென்று அங்குள்ள மடு ஒன்றில் குளித்துவிட்டு வருவார்.
அங்கு சென்று குளிப்பதற்காக குவளைக்கண்ணன் அவர்கள் பாரதியைப் போய் அழைத்து வருவது வழக்கம்.
ஒரு நாள் பாரதியே சீக்கிரமாக எழுந்து வந்து குவளைக்கண்ணனின் வீட்டுக்கு வந்து அவரை அழைக்கிறார்.
அப்போது குவளையின் தாயார் பாரதியாரிடம், "அப்பா! பாரதி நீதான் பாட்டெல்லாம் நன்றாகப் பாடுவாயாமே! ஒரு சுப்ரபாதம் பாடேன்" என்கிறாள்.
ஆகா! அதற்கென்ன பாடினால் போச்சு என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் மடுவில் பாரதி குளிக்கச் சென்று விடுகிறார்.
போகும் வழியில் சுப்ரபாதம் என்றால் இறைவனை எழுப்பப் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு,
குளித்துவிட்டு வரும் வழியில் உரத்த குரலில் பாரத நாட்டையே தெய்வமாக வைத்து "பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி" என்று இப்போது நமக்கெல்லாம் அறிமுகமாகியிருக்கும் பாடலான "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" எனும் பாடலைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும் வந்தாராம்.
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே! 1
புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே! 2
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! 3
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே! 4
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
![]() |
பாரதி பாடலோடு சிறப்பான பதிவு. பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய பதிவு பாரதியாரின் வெகு சிறப்பான பாடலுடன் அப்பாடல் உருவான சிறு செய்தியோடு மிக அருமையாகவும், சிறப்பாகவும் உள்ளது. கவிவேந்தரை அனைவரும் போற்றி, அவருக்கும், அவருக்கு இயல்பாகவே வரும் கவிதை திறன்களுக்கும் தலை சாய்த்து வந்தனங்களும் செய்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பு.
ReplyDeleteபாரதியாரைப்பற்றி மிகவும் அருமையாக அவரின் பாடல்வரிகளில் பதிவாக்கியமை சிறப்பு.
ReplyDeleteதிருப்பள்ளி எழுச்சி அருமை..
ReplyDeleteமிக ஞஅருமையான பாடல்."பாட்டுக்கொரு புலவன்..."என்பது சாலப் பொருத்தம்.
ReplyDeleteபாரதி பாடல் பகிர்வு அருமை.
ReplyDelete